தாத்தா மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் பாக்கியா – கோபி உதவுவாரா? வைரலாகும் ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருக்க மருத்துவம் பார்க்க அதிகமாக செலவு ஆகிறது. இந்நிலையில் அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. பாக்கியாவை விவாகரத்து செய்ய கோபி முடிவு செய்துள்ளார். ஆனால் அந்த விஷயத்தை கேள்விப்பட்ட தாத்தா கோபியை கண்டிக்கிறார். ஆனால் கோபி கேட்பதாக இல்லை. அதனால் உண்மையை எல்லாருடைய முன்னாடியும் சொல்ல போகிறேன் என கிளம்ப அவர் கால் தவறி கீழே விழுந்து தலையில் அடிபடுகிறது. உடனே குடும்பத்தினர் வேகமாக மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கே நிறைய செலவு ஆகிறது.
“பாரதி கண்ணம்மா” வெண்பா பரீனாவிற்கு வந்த நெகட்டிவ் கமெண்ட் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
அதை எல்லாம் செழியன் தான் பார்க்க ஜெனியிடம் சொல்லி அவர் புலம்புகிறார். ஆனால் ஜெனி நம்ம தாத்தாவிற்கு தான செலவு செய்கிறாய் என சொல்ல, ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகிறது தெரியுமா என பேசுகிறார். அதை எல்லாம் பாக்கியா கேட்டுவிட தாத்தாவின் செலவை அவரே பார்த்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால் அவரிடம் சரியாக காசு வராமல் இருக்கிறது. இந்நிலையில் கோபியிடம் பணம் கேட்க போக பாக்கியா என்ன சொல்ல வருகிறார் என கேட்காமல் கோபப்படுகிறார்.
ஐந்து ஆண்டு காதல் கதையை முதன்முறையாக சொன்ன “குக் வித் கோமாளி” புகழ் – ரசிகர்கள் வாழ்த்து!
அப்போது பாக்கியா மாமாவின் மருத்துவ செலவிற்கு பத்தவில்லை என சொல்லி செழியன் சொன்னதை சொல்லி விட்டு வருத்தத்துடன் கிளம்புகிறார். பாக்கியா எப்படி மருத்துவ செலவுகளை சமாளிக்க இருக்கிறார் என்பதே அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட் ஆகும். மேலும் இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் கோபி மற்றும் செழியன் நடந்து கொள்வது பிடிக்கவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்