“பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கிராமத்தில் பொங்கல் கொண்டாடும் குடும்பத்தினர்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் கிராமத்திற்கு சென்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அமிர்தாவையும் சேர்த்து சந்தோசமாக விழா கொண்டாடும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் குடும்ப நிகழ்வுகள் மட்டுமல்லாமல் சமூக கருத்துக்களும் கதையில் கொண்டு வரப்படுகிறது. பாக்கியாவின் இரண்டாவது பையன் எழில் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்து ஒரு குழந்தையுடன் இருக்கும் அமிர்தாவை காதலிக்கிறார். ஆனால் அமிர்தா அதெல்லாம் சரியாக வராது என சொல்கிறார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டிக்கு திருமணம்? அவரே வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
இப்படி இருக்க தற்போது பாக்கியா குடும்பத்துடன் கிராமத்திற்கு சென்று அங்கே கிராமத்து முறைப்படி பொங்கல் கொண்டாடுகின்றனர். அவர்களுடன் அமிர்தாவும் தனது குழந்தையுடன் சென்றிருக்கிறார். அமிர்தாவை குடும்பத்தில் ஒருவராக பாக்கியா பார்க்கிறார். ஆனால் ஈஸ்வரி பாட்டிக்கு எழில், அமிர்தா இருவரும் நட்பாக பழகுவது பிடிக்கவில்லை. அதனால் அவர் எழிலை கண்காணித்து கொண்டே இருக்கிறார். மறு பக்கம் கோபிக்கு இதெல்லாம் பிடிக்காமல் இருக்க அவர் ராதிகாவின் நினைப்பாகவே இருக்கிறார். அவர் போனில் அடிக்கடி சிரித்து பேசுவதை பார்த்து பாக்கியா சந்தேகப்படுகிறார்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமாவின் கல்லூரி கால புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
இனி அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குடும்பத்தினர் அனைவரும் பொங்கல் வைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். பின் கிராமத்தில் சில போட்டிகள் நடத்தப்படுகிறது. அப்போது எழில் உரி அடிக்க கோபி மீது அடிக்க போவது போல செய்கிறார். பின் உரியை பார்த்து சரியாக அடிக்க குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அப்போது குடும்பத்தினர் முன்னிலையில் ஈஸ்வரி எழில் கல்யாணத்தை பற்றி பேச இருப்பது போல அடுத்த எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.