விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் சீசன் 2வில் களமிறங்கும் நடிகை நதியா – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடிகை நதியா நடிக்க இருப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் ஒரு அழகான குடும்பத்தை பற்றிய கதையை மையமாக கொண்டுள்ளது. அந்த குடும்பத்தை பாதுகாக்கும் ஆணி வேராக பாக்கியா இருக்கிறார். அவருடைய கணவர் கோபியும் அவரது அம்மா அப்பாவிற்கு நல்ல மகனாகவும், தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாகவும் இருந்தாலும் பாக்கியாவிற்கு மட்டும் நல்ல கணவராக இருப்பதில்லை. அவர் பாக்கியாவை பிடிக்காமல் திருமணம் செய்ததால் அவரை பிரிய வேண்டும் என நினைக்கிறார். இடையே கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்.
குடித்துவிட்டு மீனாவிடம் காதலை சொல்லி கலாட்டா செய்த ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவின் அறியாமையை பயன்படுத்தி அவரிடம் விவாகரத்து பத்திரத்தில் கோபி கையெழுத்து வாங்குகிறார். அதனால் பாக்கியாவால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது. மேலும் குடும்பமே பாக்கியாவிற்கு ஆதரவாக இருப்பதால் கோபி என்ன செய்ய போகிறார் என்பதே அடுத்து வர இருக்கும் திருப்பம் ஆகும். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுக்கு பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை தெரிந்தால் சீரியல் முடிந்துவிடும்.
விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் “சிப்பிக்குள் முத்து” சீரியல் – வைரலாகும் புகைப்படம்!
அதனால் சீரியல் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியா கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை நதியா நடிக்க இருக்கிறார். அவர் சீரியலில் முதன்முறையாக நடிக்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா மாற்றப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.