பாக்கியாவின் கடை திறப்பு விழாவுக்கு வரும் ரஞ்சித், பிரியா ராமனை தடுக்கும் கோபி – ஸ்பெஷல் எபிசோடு!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவின் கடை திறப்பு விழாவுக்கு சினிமா பிரபலங்கள் ரஞ்சித், பிரியா ராமன் அழைக்கப்பட்டிருக்க, அவர்களை ராதிகாவின் அலுவலகத்திற்கு கோபி அனுப்பி வைப்பதை போல சிறப்பு எபிசோடுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ
தமிழக மக்களின் மனம் கவர்ந்த முக்கிய சீரியல்களில் ஒன்றான ‘பாக்கியலட்சுமி’ தற்போது 400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியல் பாக்கியா என்ற சாதாரண இல்லத்தரசியின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதாவது அப்பாவியான பாக்கியாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி, 3 பிள்ளைகளுக்கு அப்பாவான பின்பும் தனது பாலிய கால சிநேகிதியுடன் பழகி வருகிறார்.
சன் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
இதனை அறிந்த கோபியின் அப்பா அவரை கடுமையாக கண்டிக்கிறார். இந்த விவரங்கள் எதுவும் அறியாத அப்பாவி பாக்கியலட்சுமி, தனது பிசினஸில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான முக்கிய வேலைகளில் ஈடுபடுகிறார். ஆரம்பம் முதலே பாக்கியலட்சுமிக்கு உறுதுணையாக இருக்கும் 2வது மகன் எழில், அம்மாவின் கடை திறப்பு விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறார். இப்படிப்பட்ட கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவின் கடை திறப்பு விழா தற்போது 3 மணி நேர சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பாக இருக்கிறது.
இதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில், பாக்கியாவின் கடை திறப்பு விழாவுக்கு சினிமா நட்சத்திரங்களான ரஞ்சித் மற்றும் பிரியா ராமனை சிறப்பு விருந்தினராக அழைக்கிறார் எழில். மறுபக்கத்தில் ராதிகாவின் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் கலந்து கொள்ள இருக்கின்றனர். இப்போது இந்த 2 நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள புறப்படும் ரஞ்சித் மற்றும் பிரியா ராமனை, முதலில் ராதிகாவின் அலுவலகத்திற்கு அனுப்ப திட்டமிடுகிறார் கோபி.
“பாக்கியலட்சுமி” சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!
மறுபக்கத்தில் ரஞ்சித் மற்றும் பிரியா ராமனின் வருகையை எதிர்பார்த்து பாக்கியலட்சுமி குடும்பத்தினர், அக்கம் பக்கத்தார் அனைவரும் காத்திருக்கின்றனர். இப்போது சிறப்பு விருந்தினர்களாக வரும் ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் முதலாவதாக எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்பது தான் இந்த சிறப்பு எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது. இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில் அது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.