சன் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தங்களுக்கான சம்பத்தை தினசரி அடிப்படையில் பெறுகின்றனர். தற்போது சன் டிவியில் உள்ள சீரியல் நடிகைகளின் சம்பளத்தை பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளது.
நடிகைகளின் சம்பளம்:
சின்னத்திரையில் நடிகர், நடிகைகள் அனைவரும் தாங்கள் ஏற்று நடிக்கும் சீரியலின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வருவதால் மிகவும் பிரபலமாக உள்ளனர். இவர்கள் நடிக்கும் சீரியல்கள் ஹிட் ஆவதை பொறுத்து நடிகர், நடிகைகளின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. தினசரி அடிப்படையில் நடிகைகள் சம்பளத்தை பெறுகிறார்கள். சின்னத்திரையிலேயே விஜய் டிவி நடிகைகள் தான் அதிக சம்பளத்தை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக சீரியல்கள் என்றாலே நடிகைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
“பாக்கியலட்சுமி” சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!
சன் டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகள் வாங்கும் சம்பளத்தை பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அதிக சம்பளத்தை வாங்கும் நடிகைகளையும், அவர்களின் சம்பத்தையும் இந்த பதிவில் காண்போம். அதன்படி ரோஜா சீரியல் ப்ரியங்கா ரூ.12,000 முதல் 15,000 வரையும், தாலாட்டு சீரியல் சுருதி ராஜ் ஒரு நாளிற்கு ரூ.10,000 முதல் 13,000 வரையும், பூவே உனக்காக சீரியலில் பூவரசி ஹீரோயின் ராதிகா ப்ரீத்தி ரூ.10,000 முதல் 12,000 வரையும், ரோஜா சீரியல் கல்பனா கதாபாத்திரத்தில் நடிக்கும் சீனியர் நடிகை காயத்ரி ரூ.9,000 முத்தால் 12,000ம் வரையும் பெறுகிறார்கள்.
அடுத்ததாக சுந்தரி சீரியலில் நடிக்கும் கேபிரியல்லா மூலமாக சுந்தரி சீரியல் மிகவும் ரீச் ஆகியுள்ளதால், இவருக்கு தினமும் ரூ.9,000 முதல் 12,000 வரையும் பெறுகிறார். அன்பே வா சீரியல் மூலம் உலகம் முழுவதும் பேமஸ் ஆகியுள்ளனர் டல்னா, இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இவர் ஒரு நாளைக்கு ரூ.8,000 முதல் 10,000 வரையும் பெறுகிறாராம். பாண்டவர் இல்லம் சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைக்கு ரூ.8,000 முதல் 10,000 வரையும், வானத்தை போல சீரியலில் நடிகை ஸ்வீதா ஒரு நாளைக்கு ரூ.8,000 முதல் 10,000 வரையும் பெற்று வருகிறார். ராஜை சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை அக்ஷயா ஒரு நாளைக்கு ரூ.8,000 முதல் 10,000 வரையும் பெறுகிறார். நடிகைகள் வாங்கும் சம்பளத்தை பற்றி அறிந்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.