கோபிக்கு எதிராக திரும்பிய ஈஸ்வரி, திகைத்து நின்ற பாக்கியா – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தாத்தாவிற்கு உடம்பு சரி இல்லாமல் போனதால் மருத்துவ செலவிற்கு பணம் அதிகமாக தேவைப்படுகிறது. அதனால் பாக்கியா கடினமாக உழைக்க கோபி அதை புரிந்து கொள்ளாமல் சண்டை போடுகிறார். இதனால் ஈஸ்வரி ஒரு முடிவு எடுக்க போகிறார் அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குடும்பத்தை விட்டு வேறு ஒரு வாழ்க்கையை தேடி விட்டார். ஆனாலும் தனது குழந்தைகள் அம்மா அப்பா மீது இருக்கும் பாசத்தால் உடனே குடும்பத்தை விட்டு போக முடியாமல் இருக்கிறார். இந்நிலையில் சீரியலில் பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது. அதாவது தாத்தாவிற்கு பணம் செலவு செய்ததை செழியன் குத்தி காட்டி பேசியதை தொடர்ந்து, பாக்கியா அவனிடம் பணம் கேட்க கூடாது என நினைக்கிறார். கோபியிடம் பணம் தேவைப்படுவதாக சொல்ல, அவர் தன்னுடைய அப்பாவிற்கு செலவு சொன்னதை கூட சொல்லி காட்டுகிறார்.
அதனால் பாக்கியா கோபியிடம் பணம் கேட்க கூடாது என முடிவு செய்கிறார். இந்நிலையில் பல ஆர்டர்களை எடுத்து கஷ்டப்பட்டு எல்லா வேலைகளையும் செய்கிறார். இந்நிலையில் எப்போது கோபிக்கு ஆதரவாக இருக்கும் கோபி தற்போது புது விதமாக மாறி இருக்கிறார். அது குறித்து ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியா பண தேவை இருப்பதாக கோபியிடம் பேச கோபி பயங்கரமாக கோவப்பட்டு பேசுகிறார். அப்போது கோபி அப்பாவை மருத்துவமனையில் வைத்திருக்கும் போது 2 லட்சம் செலவு ஆனது.
அதை எல்லாம் நீயா கொடுத்தாய் என்னமோ குடும்பமே உன்னுடைய பணத்தில் தான் இயங்குவது போல சொல்கிறாய் என சொல்கிறார். சத்தமாக பேசாதீங்க அத்தை காதில் விழ போகிறது என சொல்ல, விழுந்தால் விழட்டும் என சத்தமாக கோபி சண்டை போடுகிறார். அதை எல்லாம் கேட்ட ஈஸ்வரி தன்னுடைய நகைகளை எடுத்துக் கொண்டு வந்து பாக்கியாவிடம் கொடுத்து பண தேவை எவ்வளவு இருக்கிறது என எனக்கு தெரியும் இதை வைத்துக் கொள் என சொல்கிறார். கோபி தன்னுடைய அம்மா பேசியதை நினைத்து வருத்தப்படுகிறார்.