விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ ஜெனியை ஒரு வருடம் ஏமாற்றிய நபர் – மாட்டியது எப்படி? அவரே வெளியிட்ட வீடியோ!
பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியுள்ள திவ்யா கணேஷ், தற்போது தன்னுடைய பெயரில் இருந்த போலி ஐடி குறித்த தகவல்களை கண்டுபிடித்து விட்டதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி ஜெனி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியலட்சுமியின் மருமகளாக ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ். இவர் இதற்கு முன்னர் பல சீரியலில் நடித்திருந்தாலும், ஜெனி கதாபாத்திரத்தின் மூலமே அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு சீரியலில் வில்லி பாத்திரத்தில் நடித்து வந்த திவ்யா, சன் டிவியில், சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற தொடரிலும் நடித்துள்ளார். இது தவிர ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியலை விட்டு விலகும் ஆல்யா மனசா? ரசிகர்கள் அதிர்ச்சி!
திவ்யா தனது சமூக வலைதள பக்கங்களில் எப்போது அதிக ஆக்ட்டிவாக இருப்பார். இந்நிலையில், தற்போது பாக்கியலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கம்பம் மீனாவுடன் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் திவ்யாவின் போட்டோவை வைத்து, அவரை போன்ற ப்ரோபைலை உருவாக்கி ஒரு நபருடன் பேசி வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்த இந்த விஷயத்தில், ஒரு முறை அந்த நபரிடம் திவ்யா போல் பேசிய பெண் பணம் கேட்டதாகவும், அதனை அந்த நபர் மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். பின்னர், சிறிது நாட்கள் கழித்து தனது மொபைல் போனிற்கு ரூ,98 க்கு ரீசார்ஜ் செய்ய சொல்லி இருக்கிறார் அந்த பெண்.
‘விஜய் டிவி’ ஆல்யா மனசா முதல் ‘ஜீ தமிழ்’ ஷபானா வரை – ரீலில் இருந்து நிஜமாக மாறிய ஜோடிகளின் லிஸ்ட்!
இதனால் அந்த நபருக்கு சந்தேகம் வர தொடங்கி இருக்கிறது. உடனே, திவ்யாவை பற்றி அறிந்து கொண்டு அந்த போலியான நபரை கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று திவ்யா கூறியிருக்கிறார். இதனை தனக்கு தெரிந்த நபர் மூலமாக அந்த நபர் திவ்யாவிடம் தெரிவித்ததாகவும் வீடியோவில் கூறி இருக்கிறார். இது போல் முன்னரும் பல முறை போலியான ஐடி பற்றி தெரிந்திருக்கிறது, ஆனால் அவற்றை தான் கண்டுகொண்டதில்லை என்று கூறும் திவ்யா. இந்த முறை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக மாறி இருகிறது என்று கூறியுள்ளார். மேலும், இது போன்ற போலியான ஐடிகளை பார்த்து மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும், அதற்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் திவ்யா தெரிவித்திருக்கிறார்.