‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்கொலைக்கு முயன்ற இனியாவின் தோழி – அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கும் பாக்கியா!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்சமயம் இனியாவின் தோழி நிகிலாவுக்கு நடந்த அநீதிக்கு எதிராக பாக்கியா குரல் கொடுப்பதை போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ
ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரையும் டிவி சீரியல்கள் எல்லாம் மாமியார் கொடுமைகள், சண்டை, சச்சரவு என வழக்கமான பாணியில் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. இதனை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் ரசிகர்கள் காத்து கிடந்தனர். ஆனால் காலப்போக்கில் ரசிகர்களின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் மாற அதற்கு ஏற்றார் போல சினிமாவும், சின்னத்திரை சீரியல்களும் மாற துவங்கியுள்ளன. அந்த வகையில் மருமகளை ஆதரிக்கும் மாமியார், கூட்டு குடும்பம், சமூக கருத்துக்கள் என மக்கள் எதிர்பார்க்கும் பல ஸ்வாரசியமான கதைகளை சீரியல்கள் வழங்கி வருகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கயலின் காதுகுத்து! ரசிகர்கள் உற்சாகம்!
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலும் தற்போது மிக முக்கியமான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. சமீப காலமாக நாம் அதிகம் கேள்விப்பட்டு வரும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையமாக வைத்து இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களிடம் சில கருத்துக்களை எடுத்துரைக்கிறது. அதாவது இந்த சீரியலில் பாக்கியாவின் மகள் இனியா படிக்கும் பள்ளியின் ஆசிரியர், நிகிலா என்ற மாணவிக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார்.
Vijay TV Bigg Boss Promo – கைகலப்பில் இறங்கிய பிரியங்கா & தாமரை, போட்டியில் இருந்து விலகும் பாவனி!
இதனை தட்டி கேட்கவோ, எதிர்க்கவோ முடியாத சூழல் உருவாக அந்த மாணவி தூக்கிட்டு கொள்வதை போல சில காட்சிகள் சமீபத்திய எபிசோடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களத்தில், அந்த மாணவியின் தற்கொலை தேர்வு பயத்தினால் உண்டானது என்று பள்ளியின் தலைமை ஆசிரியை கூற, நடந்த உண்மைகளை அறிந்த பாக்கியா ஆசிரியருக்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு வெளியான ப்ரோமோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.