“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கயலின் காதுகுத்து! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கயல் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அடுத்ததாக கயலின் முதல் மொட்டை மற்றும் காதுகுத்து நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டு குடும்பத்தின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. கடைசி தம்பி கண்ணன் வீட்டில் சேர்க்கப்பட்ட நிலையில் குடும்பத்தில் சந்தோசம் மீண்டு வந்திருக்கிறது. ஆனால் கண்ணனிற்கு படுக்க ரூம் இல்லாமல் இருக்க, தனம் தன்னுடைய ரூமில் படுக்க சொல்கிறார். மூர்த்தி ஹாலில் படுத்திருப்பதை பார்த்து ஜீவாவும், கதிரும் கவலைப்படுகின்றனர். கதிர் சீக்கிரமாக பெரிய வீடு கட்ட வேண்டும் என சொல்ல, முதலில் கடை வேலை முடியட்டும் என மூர்த்தி சொல்கிறார்.
Vijay TV Bigg Boss Promo – கைகலப்பில் இறங்கிய பிரியங்கா & தாமரை, போட்டியில் இருந்து விலகும் பாவனி!
இந்நிலையில் சென்ற வாரம் கயலின் முதல் பிறந்தநாள் முடிவடைந்துள்ளது. அப்போதே மீனா அப்பா கயல் முதல் மொட்டை பற்றி கேட்க, சீக்கிரமாக சொல்கிறோம் என மூர்த்தி சொல்கிறார். தற்போது ஐஸ்வர்யா நைட்டி போட்டு வந்த விஷயம் எல்லாம் பெரிய பிரச்சனையாக வரப்போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னும் 2 வாரத்தில் கடை வேலை முடிந்து கடை திறப்பு விழாவும் நடைபெற இருக்கிறது. அடுத்து வரும் எபிசோட் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
திருமணத்திற்கு பிறகு ‘செம்பருத்தி’ ஷபானா வெளியிட்ட முதல் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
அதன்படி கயலின் முதல் மொட்டை போடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அன்றே கயலுக்கு காதுகுத்து நடைபெறும். அதில் எந்த மாதிரியான பிரச்சனை வர இருக்கிறது என பார்க்கலாம். ஏற்கனவே மீனா கோவமாக இருக்கும் நிலையில் கயல் மொட்டை போடும் நிகழ்ச்சியில் என்ன செய்ய காத்திருக்கிறார் என தெரியவில்லை. சீரியலில் மேலும் விறுவிறுப்பை அதிகரிக்க எந்த மாதிரி கதை கொண்டு செல்லப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.