‘இனிமே வீட்டுக்கு வராதீங்க கோபி’ – மயூரியை நினைத்து கவலையில் ராதிகா! இன்றைய எபிசோட்!
விஜய் டிவியில் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று பாக்கியா மீண்டும் சமையல் செய்து பார்க்கிறார். இதனை பார்த்து விட்டு அவரது மாமியாருக்கு கோபம் வந்து அவரை திட்டி விடுகிறார். பாக்கியாவை எழில் சமாதானம் செய்கிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று பாக்கியா மீண்டும் சமையல் செய்கிறார். அவர் செய்வதை பார்த்து விட்டு அவரது மாமியார் கோபத்துடன் அவரை திட்டுகிறார். இதனால் வருத்தமடையும் பாக்கியா தான் ஒரு முறை அதனை செய்து பார்க்க முடிவு எடுத்து இருப்பதாக கூறுகிறார். இதனால் சோகம் அடைந்து விடும் பாக்கியாவை எழில் சமாதானம் செய்கிறார். இதனால் தெளிவு அடையும் பாக்கியா மீண்டும் ஸ்வீட் வகைகளை செய்து பார்க்கிறார். இந்த முறை அவர் செய்ததும் நன்றாக வந்து விடுகிறது.
விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய புகழ் – கவலையில் ரசிகர்கள்!
அதனை செல்வி, ஜெனி மற்றும் எழில் மூவருக்கும் கொடுக்கிறார். அதனை அவர்கள் ருசித்து விட்டு நன்றாக இருப்பதாக கூறி விடுகின்றனர். பின், இதனை தொடர்ந்து செய்யவும் வலியுறுத்துகின்றனர். பின், எழில் தனது அப்பா கோபியிடம் சென்று தனக்கு ஒரு லோன் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறுகிறார். யாருக்கு அந்த லோன் என்று கோபி கேட்டதும், புது பைக் ஒன்றினை பாக்கியாவிற்கு வாங்கி தர இருப்பதாகவும், அதற்கு லோன் வாங்கி தர உதவ வேண்டும் என்றும் கூறுகிறார். தான் அதனை பார்த்து கொள்வதாக கோபி கூறி விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின், கோபி ராதிகா வீட்டிற்கு செல்கிறார். ராதிகா அவரை தவிர்க்க பெரிதும் முயற்சிக்கிறார். மயூரிக்காக இனி இந்த வீட்டிற்கு வர வேண்டாம் என்று ராதிகா கோபியிடம் கூறி விடுகிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடையும் கோபி இனி தான் இங்கு வரவில்லை என்றும் ஆனால், ராதிகா மற்றும் மயூரி இருவரையும் பார்க்காமல் தன்னால் இருக்க முடியாது என்று கூறுகிறார். தான் ராஜேஷ் போல இருவரையும் தனியாக தவிக்க விட மாட்டேன் என்று கூறி விட்டு ராதிகாவை வெளியே அழைத்து செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.