விஜய் டிவியின் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பாக்கியலட்சுமி’ எழில் – ரசிகர்கள் குஷி!
ஒவ்வொரு நாளும் புது புது எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவின் செல்ல மகன் எழில் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தற்போது அதே சேனலில் புதிதாக ஒரு தொடரில் நடித்து வருகிறார். அந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பாக்கியலட்சுமி தொடர் எழில்:
தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்ப பெண்களின் ஆதரவை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருக்கும் தொடர் தான் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி. தற்போது படு சூடாக ஓடிக் கொண்டிருக்கும் கதைக்களம் பார்வையாளர்களை ஒவ்வொரு நாளும் எல்லா எபிசோடுகளையும் தவறாமல் பார்க்க வைத்து வருகிறது. பல நாட்களாக மக்கள் மத்தியில் இருந்த கேள்வி என்றால் அது பாக்கியாவிடம் கோபி எப்போது சிக்குவார்? ராதிகாவுடன் கோபி இணைவாரா? இல்லை ராதிகாவுக்காவது உண்மை தெரிய வருமா? என்ற பலவிதமான கேள்விகளுக்கும் தற்போது விடை கிடைக்கும் விதமாக தொடர் நகர்கிறது.
தனது அம்மா யார் என பாரதியிடம் கேட்ட ஹேமா, கண்ணம்மாவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி – ப்ரோமோ ரிலீஸ்!
இவ்வாறு ராதிகாவிடம் சிக்கிய கோபி ஒருபக்கம் சிக்கி சுண்ணாம்பாக தவித்து வருகிறார். மறு பக்கம் பாக்கியாவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கணவன் கோபி மீது சந்தேகம் வர தொடங்கியுள்ளது. இவ்விதமாக தொடர் ஒரு வழியில் படு ஹிட் கொடுக்க, இந்த சீரியலில் பாக்கியாவுக்கு செல்ல மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் அவர்கள் ஒரு புது சீரியலில் கமிட் ஆகி உள்ளார்.
Exams Daily Mobile App Download
எஸ்! அனைத்து இளம் பெண்களின் கண்களை தன் வசம் ஈர்க்கும் அளவுக்கு நடிப்பால் வளர்ந்து வரும் நடிகர் விஷால் அவர்கள் அதே விஜய் தொலைக்காட்சியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஒரு புது அறிமுகமாக நல்ல ரோலில் நடித்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சூப்பர் என வாழ்த்துக்களை தெரிவித்த மயமாக உள்ளனர்.