ஜனார்த்தனனை தள்ளி விட்டவரை அடித்து உதைக்கும் ஜீவா – அதிரடி காட்சிகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று மீனாவிடம் அவரது அம்மா நடந்தவற்றை கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் மீனா அனைத்தையும் ஜீவாவிடம் கூறுகிறார். ஜீவா ஜனார்த்தனனை அவமானப்படுத்தியவரை அடித்து நொறுக்கி விடுகிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று மீனாவின் அப்பாவை எதிர் கடைக்காரர் அடித்து அவமானப்படுத்தி விடுகிறார். மேலும் மீனாவின் அம்மா மீனாவிடம் போன் செய்து அனைத்தையும் கூறுகிறார். இதனை கேட்டு மீனா அழுகிறார். பின், அதனை ஜீவாவிடம் கூறுகிறார். ஜீவாவும் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து விடுகிறார். பின், ஜீவா மற்றும் மீனா இருவரும் மீனாவின் வீட்டிற்கு செல்கின்றனர். ஜீவா, ஜனார்தனனுக்கு அடிபட்டு விட்டது என்று தனம் மற்றும் முல்லையிடம் கூறி விட்டு செல்கிறார்.
JEE 3 ஆம் கட்ட நுழைவுத் தேர்வுகள் – இன்று முதல் துவக்கம்!
பின், மீனாவின் வீட்டிற்கு செல்லும் ஜீவா நடந்த அனைத்தையும் கேட்டு கொந்தளிக்கிறார். பின், கோபத்துடன் மீனாவின் அப்பாவை அடித்தவரை தேடி சென்று அடித்து நொறுக்கி விடுகிறார். பின், மூர்த்தி மற்றும் கதிர் இருவரும் நடந்த அனைத்தையும் தெரிந்து கொள்கின்றனர். பின், மீனாவின் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு ஏற்கனவே ஜீவா மீனாவின் அப்பாவை அடித்தவரை அடித்து கூட்டி வந்திருக்கிறார் என்பதனையும் தெரிந்து கொள்கின்றனர். மூர்த்தி மற்றும் கதிர் இருவரும் அடித்தவரை மன்னிப்பு கேட்கும்படி கூறுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் மீனா, மீனாவின் அம்மா மற்றும் அப்பா அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். மீனாவின் அப்பாவிடம் தனியாக சென்று பேசும் ஜீவா இனி எது நடந்தாலும் தானும், தனது குடும்பமும் உறுதுணையாக இருப்போம் என்று கூறுகிறார். இதனால் உணர்ச்சிவசப்படும் மீனாவின் அப்பா, ஜீவாவை கட்டி அணைத்து கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!