JEE 3 ஆம் கட்ட நுழைவுத் தேர்வுகள் – இன்று முதல் துவக்கம்!
கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட இருந்த பொறியியல் மாணவர்களுக்கான JEE பொது நுழைவுத்தேர்வுகள் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, அவை இன்று (ஜூலை 20) முதல் மீண்டுமாக துவங்கியுள்ளது.
நுழைவுத் தேர்வுகள்
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பேரலையாக உருவான கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களை வழங்கும் பணிகளில் பல மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கணக்கீட்டு முறை – மாணவர்கள் வரவேற்பு!
இதனிடையே பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படும் JEE மற்றும் நீட் நுழைவுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தேர்வு முகமை சமீபத்தில் அறிவித்தது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் தாக்கமானது அதிகரித்து வந்த சமயத்தில் நடத்தப்பட இருந்த JEE மூன்றாம் கட்ட நுழைவுத்தேர்வுகள் இன்று (ஜூலை 20) துவங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இன்று துவங்கியுள்ள நுழைவுத்தேர்வுகள் வரும் 22, 25, 27 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடைபெறவுள்ளன. அந்த வகையில் வெளிநாடுகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 334 நகரங்களில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளில் சுமார் 7,09,519 பேர் கலந்துகொள்ள உள்ளனர். அந்த வகையில் தமிழகத்திலும் சென்னை, கோவை உள்ளிட்ட 15 நகரங்களில் இந்த கணினி வழித்தேர்வுகளுக்கு பதிவு செய்துள்ளவர்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தேர்வு நுழைவு சீட்டுடன் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.