எழில் – அமிர்தா திருமணத்தால் சிக்கலில் சிக்கிய பாக்கியா.. வீட்டை விட்டு அனுப்பிய ஈஸ்வரி, கோபி!

0
எழில் - அமிர்தா திருமணத்தால் சிக்கலில் சிக்கிய பாக்கியா.. வீட்டை விட்டு அனுப்பிய ஈஸ்வரி, கோபி!
எழில் - அமிர்தா திருமணத்தால் சிக்கலில் சிக்கிய பாக்கியா.. வீட்டை விட்டு அனுப்பிய ஈஸ்வரி, கோபி!
எழில் – அமிர்தா திருமணத்தால் சிக்கலில் சிக்கிய பாக்கியா.. வீட்டை விட்டு அனுப்பிய ஈஸ்வரி, கோபி!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது மகனின் வாழ்க்கைக்காக பெரிய ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளார் பாக்கியா. வர்ஷினியுடன் எழிலுக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி தன் மகனின் காதலை காப்பாற்றுகிறார். அதனால் பாக்கியாவுக்கு பெரிய சிக்கல் ஒன்று வரவுள்ளது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி தொடரில் வீட்டின் கஷ்டத்தை காரணம் காட்டி எழில் வர்ஷினி திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார் ஈஸ்வரி. வேறு வழியில்லாமல் எழிலும் திருமணத்திற்கு வேண்டா வெறுப்பாக சம்மதிக்கிறார். ஆனால் கடைசி நேரத்தில் எழில் மனதில் உள்ளதை பாக்கியா கண்டுபிடித்து விடுகிறார். எழில் அமிர்தா பேசுவதையும் பாக்கியா கேட்டுவிட தன் மகனின் காதலை காப்பாற்ற துணிந்துவிடுகிறார் பாக்கியா.

பார்த்திபனை விட்டு ரஜினியை பிரிக்க திட்டமிடும் அழகம்மை – ஜீ தமிழ் ‘ரஜினி’ சீரியலில் எதிர்பாராத திருப்பம்!

வர்ஷினி மணமேடையில் உட்காருவதற்கு முன்பே அமிர்தாவை மணகோலத்தில் பாக்கியா அழைத்து வந்துவிடுகிறார். குடும்பமே எதிர்க்க பாக்கியா எழிலுக்கு அமிர்தாவை திருமணம் செய்து வைக்கிறார். இது கோபி உள்பட குடும்பத்தினர் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாக்கியா செய்ததை தாங்கிக்க முடியாத கோபி பாக்கியாவை வீட்டிற்குள் விடாமல் வெளியே துரத்துகிறார்.

மேலும் எழில் அமிர்தாவையும் பாக்கியாவுடன் சேர்த்து வெளியே அனுப்புகிறார் கோபி. இது பிடிக்கவில்லை என்றாலும் ராமமூர்த்தியால் பாக்கியா செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. செழியனும் தன் அப்பாவின் பேச்சை கேட்டு அமைதிகாக்கிறார். இத்தகைய காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் வரவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!