பார்த்திபனை விட்டு ரஜினியை பிரிக்க திட்டமிடும் அழகம்மை – ஜீ தமிழ் ‘ரஜினி’ சீரியலில் எதிர்பாராத திருப்பம்!
ரஜினி சீரியல் சில நாட்களாக மிகவும் உணர்ச்சி பூர்வமான காட்சிகளுடன் சென்று வரும் நிலையில், தற்போது அழகம்மை ரஜினியிடம் பார்த்திபனை விட்டு பிரிய சொல்லும் காட்சிகள் வர உள்ளது.
ரஜினி – பார்த்திபன்:
ஜீ தமிழ் சேனலின் ரஜினி தொடரில், பார்த்திபனின் அப்பா இறப்பிற்கு பிறகு கதைக்களம் முழுவதுமாக மாறியுள்ளது. தனது அப்பா இறப்பதற்கு ரஜினியும் ஒரு காரணம் தான் என்று பார்த்திபன் ரஜினி மீது வருத்தத்தில் இருந்தார். இருந்தாலும், ரஜினியை விட்டு பிரிய வேண்டும் என்று இதுவரையிலும் நினைக்கவில்லை. இந்நிலையில், பார்த்திபனின் அப்பாவின் மறைவிற்கு பிறகு செய்யும் சடங்குகளை செய்ய வேண்டும் என்று அனிதாவிடம் சென்று பார்த்திபன் கேட்க, இதை இப்போ நான் முடிவு செய்ய முடியாது.
கூகுளின் இந்த AI சாட்போட்டால் 100 பில்லியன் டாலர் நஷ்டம் – கொடி கட்டி பறக்கும் Microsoft!
அழகம்மை அத்தை தான் இந்த விஷயத்தை முடிவெடுக்க முடியும் என்று அனிதா சொல்லி விடுகிறார். இதனால் பார்த்திபன் கோயிலில் இருக்கும் அத்தையிடம் சென்று நானும் அப்பாவிற்கு செய்யும் சடங்குகளை செய்ய வேண்டும் என்று அனுமதி கேட்க, அதற்கு அழகம்மை, நான் தான் ரஜினி உனக்கு ஏத்த மனைவி என்று சொன்னேன். ஆனால் நானே அந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க போறேன், நாளைக்கு நடக்கப்போற பூஜைக்கு நீ வா என்று சொல்லுகிறார்.
இன்னொரு புறம் அனிதாவிடம், நாளைக்கு ரஜினியை வர சொல்லு என்று சொல்ல, அனிதா ரஜினிக்கு கால் செய்து நாளைக்கு நடக்க இருக்கும் பூஜைக்கு வா என்று சொல்ல, ரஜினி சரி என்று சொல்லுகிறார். அடுத்த நாள் சொன்னது போலவே, ரஜினி கோயிலுக்கு வந்து அழகம்மையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயற்சி செய்கிறார். அப்போது, அழகம்மை நீ பார்த்திபனை விட்டு பிரிந்து சென்று விடு என்று சொல்லி ரஜினியை அதிர்ச்சியாக்குகிறார். இனி வரும் நாட்களில் கதை இதை நோக்கி தான் நகர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.