தேர்தலில் ஜெயித்து கோபி, ராதிகா முகத்தில் கரியை பூசிய பாக்கியா – வரப்போகும் மாஸான எபிசோடுகள்!!
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவும், பாக்கியாவும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு Secretary தேர்தலில் நிற்கின்றனர். யார் தேர்தலில் ஜெயித்து வெற்றி பெற போகின்றனர் என்கிற அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
திருமணம் முடிந்து 3 பிள்ளைகள் இருக்கும் பொழுது கணவனால் கைவிடப்பட்ட பெண் எப்படி தன் சொந்த காலில் முன்னேறுகிறார் என்பதே பாக்கியலட்சுமி சீரியலின் தற்போதைய கதைக்களம். மேலும் காலனி secretary தேர்தலும் தற்போது வரப்போகிறது. அதில் பாக்கியா, ராதிகா தான் மோதிக்கொள்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
படித்தவர்கள் இந்த பொறுப்பை திறம்பட செய்ய முடியும் என கோபி ராதிகா ஒட்டு கேட்க பாக்கியாவிற்கு தான் படிக்கவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை ஒருபக்கம் வந்து போகிறது. இருப்பினும் தன்னம்பிக்கையை இழக்காமல் வாக்கு சேகரிக்கிறார் பாக்கியா. தன் மனைவி ராதிகாத்தான் ஜெயிப்பார் என கோபி இருக்க ஆனால் அதற்கு மாறாக நடக்கிறது.
சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை – தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
Exams Daily Mobile App Download
பாக்கியா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறுகிறார். ஈஸ்வரி, செழியன், இனியா உள்பட அனைவரும் சந்தோசப்பட ராதிகாவின் ஒட்டுமொத்த கோவமும் கோபி பக்கம்தான் திரும்புகிறது. உங்கள் சுயநலத்துக்கு என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள் என கோபியை ராதிகா சத்தம் போடுகிறார். இவ்வளவு சுவாரஸ்யமான காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.