பாக்கியாவின் நிலைமையை பார்த்து உடல்நிலை சரியில்லாமல் போன தாத்தா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா மீது பெரிய புகார் ஒன்று வந்து போலீசார் அவரை கைது செய்து இருக்கிறார். இந்நிலையில் பாக்கியாவை நினைத்து ஈஸ்வரி ராமமூர்த்தி வருத்தத்துடன் இருக்கின்றனர். அதனால் ராமமூர்த்திக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளது. பாக்கியா சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் பாக்கியா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். தான் எந்த தவறும் செய்யவில்லை என பாக்கியா சொல்ல, ஆனால் அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் வலுவாக இருக்கிறது. அதனால் எதுவும் செய்யமுடியவில்லை. குடும்பமே கோபிக்கு போன் செய்ய ஆனால் கோபி போனை எடுக்கவில்லை.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து நிரூப் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் கேள்விக்கு பதில்!
ராதிகாவிற்கு துணையாக கோபி இருக்கிறார். இந்நிலையில் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் பாக்கியாவை காப்பாற்ற எழில் கிளம்ப போகிறார். பாக்கியா சமைத்த சாப்பாட்டை பரிசோதனை செய்து அதில் எந்த பிரச்சனையும் இல்லை என நிரூபிக்க போகிறார். இந்த சூழ்நிலையில் பாக்கியாவை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ள சொல்லி போலீசார் சொல்லிவிடுகின்றனர். அதனால் பாக்கியா ஒரு நாள் முழுவதும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்க போகிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதை நினைத்து குடும்பத்தில் அனைவரும் வருத்தப்படுகின்றனர். செல்வி, ஜெனி, இனியா, ஈஸ்வரி என அனைவரும் பாக்கியாவை நினைத்து வருத்தப்படுகின்றனர். ராமமூர்த்திக்கு எல்லாம் தெரிந்தும் கூட அவரால் எதுவும் செய்ய முடியாததை நினைத்து வருத்தப்படுகிறார். அவருக்கு கவலைப்பட்டு உடம்பு சரியில்லாமல் போகிறது. அதனால் மீண்டும் மருத்துவமனையில் தாத்தா அனுமதிக்கப்படுகிறார். மரணத்தின் விளிம்பில் தாத்தா இருக்க கோபியை பற்றிய உண்மையை சொல்வாரா என்பது எல்லாம் இனி வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.