நினைத்ததை சாதித்த கோபி.. பாக்கியா தலையில் இடியை போட்ட முக்கிய நபர்.. இடிந்த குடும்பம்!
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்து வரும் அதிரடி கட்டங்கள் அனைத்தும் சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. அந்த வகையில் வரும் வாரம் நடக்க இருக்கும் முக்கிய மாற்றம் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கோவத்தில் இனியா:
பாக்கியா மேல் எவ்வளவு தான் கோவமாக இருந்தாலும், தன் குழந்தைகளை பாசமாக கோபி பார்த்துக் கொள்வார். அதிலும், இனியா என்றால் அவ்வளவு பாசம். இப்படி இருக்கும் போது ராதிகாவுடன் திருமணம் செய்து கொண்டு இனியாவையும் தன்னுடன் அழைத்துச் சென்று விட வேண்டும் என்று கோபி திட்டம் போட்டார். ஆனால், கோபியும் ராதிகாவும் திருமணம் செய்து கொள்ள போவதை தெரிந்து இனியா கோபியை வெறுத்து விட்டார். இதனால் கோபி மிகவும் கவலையில் இருந்தார்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், இனியா பள்ளியில் செல்போன் வைத்திருந்ததாக கூறி பேரன்ட்ஸ் உடன் வர வேண்டும் என்று சொல்லி அனுப்பி உள்ளார்கள். இனியா பயந்து கொண்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல், மறுநாள் பள்ளிக்கு சென்ற போது, வீட்டிற்கே அனுப்பி வைத்து விட்டார்கள். ஏன் ஸ்கூலுக்கு போகாமல் வீட்டிற்கு வந்தாய்? என்று வீட்டில் அனைவரும் கேட்க, இனியா நடந்த விஷயங்களை சொல்லுகிறார்.
Exams Daily Mobile App Download
இதனால், அனைவரும் இனியாவை கண்டிக்க இனிய எதிர்த்து பேசியதும் கோவம் வந்து அடிக்க கை ஓங்குகின்றனர். இதனால், நான் இனிமேல் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்லி இனியா வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது, கோபி வீட்டில் இருந்து சத்தம் வருவதை கேட்டு, வீட்டை பார்த்து வர, இனியா அலுத்து கொண்டே எல்லாரும் தன்னை அடிக்க வருவதாக சொல்லுகிறார். கோபி, இது தான் சாக்கு என்று தன்னுடன் இனியாவை அழைத்து செல்ல யோசிக்கிறார்.