பாக்கியாவிற்கு புதிய வண்டி வாங்கி தரும் கோபி, வருத்தத்தில் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கிய லட்சுமி” சீரியலில் இன்று எழில் வீட்டில் உண்மையை சொல்லாமல் இருக்க கோபி பாக்கியாவிற்கு புதிய வண்டி வாங்கி தருகிறார். அதை பார்த்து குடும்பத்தில் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர். எழில் தனது அம்மாவின் நிலைமையை பார்த்து வருத்தப்படுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் அமிர்தா குடும்பத்தில் நெருக்கமாக பழகி வருகிறார். மகனை இழந்த அமிர்தா குடும்பத்தினர் எழிலை சொந்த மகனாக பார்க்கின்றனர். கரண்ட் பில் கட்டியதற்கு காசு கொடுக்க அதனை எழில் வாங்க மறுக்கிறார். பின்னர் குடும்பத்தில் அனைவரும் காமெடி பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் போது எழில் தனது அப்பா செய்த காரியத்தை நினைத்து வருத்தப்படுகிறார். பின்னர் அமிர்தா குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருப்பதை நினைத்து நன்றி தெரிவிக்கிறார்.
பின்னர் கோபி வீட்டிற்கு வந்ததும் பாக்கியாவை வெளியே அழைக்கிறார். வெளியே சென்று பார்த்தல் புதிதாக வண்டி வாங்கி தருகிறார். அதை பார்த்ததும் குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக உள்ளனர். அப்போது எழில் அங்கே வருகிறார். அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து எதுவும் பேச முடியாமல் எழில் இருக்கிறார். கோபி எழில் முன்னாடி பாக்கியாவை வைத்து வண்டி ஓட்டுகிறார்.
பின்னர் எழில் கோபியை பார்த்து என் அம்மாவை ஏமாத்த என்னவெல்லாம் பண்ணுவீங்க அப்படினு பேசுகிறார். அப்போ பாக்கியா அங்கே வர கோபி அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர் கோபியை பற்றி எழிலிடம் பாக்கியா புகழ்ந்து பேச எழில் எதுவும் பேச முடியாமல் நிற்கிறார். மறுநாள் செல்வி அங்கே வர பாக்கியா வெளியே சென்று தனது வண்டியை காட்டி சந்தோசப்படுகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.