ஐஸ்வர்யாவை எச்சரிக்கும் பிரசாந்த், குடும்பத்திடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று ஐஸ்வர்யா கண்ணனுக்கு போன் செய்து பிரசாந்திடம் அனைத்தையும் சொல்லிவிட்டதாகவும், அதனால் தான் கல்யாணத்தை சீக்கிரமாக வைத்திருக்கிறார்கள் எனவும், குடும்பத்துடன் மதுரைக்கு செல்வதாக தெரிவிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா, கண்ணனுக்கு போன் செய்து, பிரசாந்திடம் நம்ம காதல் குறித்து எல்லாத்தையும் சொல்லிட்டேன். அவர் அதனால கல்யாணத்தை நிறுத்துவார் என்று நினைச்சேன் ஆனால் சீக்கரம் கல்யாணம் பண்ணனும்னு சொல்லிடான் என்று பேசிக் கொண்டிருக்கும்போது பின்னால் பிரசாந்த் வந்து போனை வாங்கி கண்ணனை திட்டுகிறார்.
நான் ஒன்னு ஆசைப்பட்ட அது கண்டிப்பா எனக்கு வேணும்னு ஐஸ்வர்யாவை எச்சரித்து அனுப்புகிறார். பின்னர் கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் போது மீனா, ஜீவா, முல்லை பேசிக் கொண்டிருக்கின்றனர். கண்ணன் அவர்களிடம் சொல்லிவிடலாமா என குழப்பத்தில் நிக்கும் போது ஜீவா கண்ணனுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். பின்னர் கண்ணா கோபத்துடன் அங்கிருந்து செல்லுகிறார்.
தனத்தின் அம்மா அவரை நன்றாக கவனித்து கொள்ள நாளைக்கு மருத்துவமனை போகணும்னு பேசிட்டு இருகாங்க. அப்போ கண்ணா வந்து சொல்லிடலாம்னு இருக்க. என்னாச்சு கண்ணா ஏன் ஒரு மாதிரி இருக்கானு மூர்த்தி தனம் கேட்கிறார்கள். அதெல்லாம் ஒன்னும் இல்லைனு சொல்ல தனம் அவரை நினைத்து கவலைப்படுகிறார். தனத்தை பார்த்து அவரது அம்மா தேவையில்லாமல் கவலைப்படாத எனக்கு நீ மட்டும் தான் முக்கிய என்று சொல்கிறார்.
சமையலில் சொதப்பும் சந்தியா; கற்றுக்கொடுக்கும் சரவணன்- இந்த வார ‘ராஜா ராணி 2’ புரோமோ!
பின்னர் ஐஸ்வர்யா வீட்டில் கல்யாண ஏற்பாடு காரணமாக மதுரைக்கு செல்ல முடிவு செய்கின்றனர். இதனால் ஐஸ்வர்யா என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணனுக்கு போன் செய்கிறார். நம்ம நினைச்ச மாதிரி இல்ல பிரசாந்த் ரொம்ப மோசமானவனா இருக்கான் என்று சொல்ல, நாங்க கல்யாண வேலைக்காக மதுரைக்கு போறோம் எதாவது பண்ணு கண்ணானு சொல்றா. அப்போ ஐஸ்வர்யா சித்தி வந்து பேசி எச்சரித்து போனை வாங்கி வைத்துக் கொள்கிறார். பிறகு முல்லையிடம் போன் செய்து கண்ணனை ஒழுங்கா இருக்க சொல்லு ஐஸ்வர்யாவிற்கு இப்போ தான் நல்ல வாழ்க்கை அமைய போகுதுனு எச்சரிக்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!
என்ன தகுதி இருக்கு என்று இந்த கண்ணன் ஐஸ்வர்யாவை விருப்புகிறான்? கண்ணன் நடிப்பு மிகவும் கேவலமாகவும் எரிச்சல் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.