மிக பெரிய சமையல் ஆர்டர் வழங்கிய வாடிக்கையாளர், குழப்பத்தில் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் வாடிக்கையாளர் ஒருவர் மிகப்பெரிய சமையல் ஆர்டர் ஒன்றை கொடுக்கிறார். பின் பாக்கியா செல்வியை சமையல் ஆர்டர் பற்றி பொய் சொன்னதை சொல்லி திட்டுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி’ சீரியலில், பாக்கியா வடிக்கையாக சமையல் கொடுக்கும் இடத்தில் இருந்து அழைக்கின்றனர். அங்கே சென்ற பாக்கியாவும், செல்வியும் அமர்ந்திருக்க அந்த வசதியான வீட்டுக்காரர். இதுவரை எத்தனை ஆர்டர் சமைத்திருக்கிங்க, எத்தனை பேருக்கு சமைத்திருக்கிங்க என கேட்க, செல்வி பொய் சொல்லி புகழ்ந்து விடுகிறார். பாக்கியாவிற்கு ஒன்றும் புரியாமல் இருக்க, எங்களிடம் 25 பேர் வேலை செய்கிறார்கள் என செல்வி புகழ்ந்து சொல்ல, உடனே அவர் சரி என சொல்கிறார்.
அவருடைய நிறுவனத்தில் சமைக்க வேண்டும் என அவர் சொல்லி ஒரு 1000 பேருக்குசமைக்க வேண்டும் என சொல்கிறார். பாக்கியா என்ன சொல்வதென்று தெரியாமல் சரி என சொல்ல, சாப்பாடு நன்றாக இருக்க வேண்டும் அங்கே சமைக்க இடம் எதுவும் இல்லை, உங்க இடத்திலேயே சமைத்து கொண்டு வந்துருங்க என சொல்கிறார். பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க, எவ்வளவு அட்வான்ஸ் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளுங்கள் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.
பாக்கியா வெளியே வந்ததும் செல்வியை பார்த்து முறைக்க, வீட்டிற்கு வா உனக்கு இருக்கு என சொல்கிறார்.வீட்டிற்கு வந்ததும் செல்வியை கண்டபடி திட்ட, நான் சொல்லும்போது நீ அமைதியா தான இருந்த என செல்வி சொல்கிறார். உடனே அங்கே எழில் வர என்னாச்சு என கேட்கிறார். அவர் நடந்ததை சொல்லி எல்லாம் செல்வியால தான் என சொல்கிறார். பாக்கியா நாளைக்கு சென்று இந்த ஆர்டர் வேண்டாம் என சொல்ல போகிறேன் என சொல்கிறார்.
பின் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க பாட்டி திடீரென சிரிக்கிறார். என்ன நடந்தது ஏன் இப்படி சிரிக்கிறீங்க என எல்லாரும் கேட்க, பாக்கியாவிற்கு வந்த சமையல் ஆர்டர் பற்றி சொல்கிறார். அந்த வாடிக்கையாளர் அவங்க நிறுவனத்தில் சமைக்க வேண்டும் என சொல்லிருக்கார். அதுவும் 1000 பேருக்கு சமைக்க வேண்டுமாம் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.