அம்மா இறந்தது தெரியாமல் இருக்கும் கண்ணன், கண்ணீரஞ்சலி போஸ்ட்டரை பார்த்து அதிர்ச்சி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கடைசியாக கண்ணன் வராமல் ஊர் மக்கள் அவசரம் காரணமாக குடும்பத்தினர் லட்சுமி அம்மாவிற்கு சடங்குகள் நடத்துகின்றனர். அதன் பின்னர் சுடுகாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். கண்ணன் வந்ததும் அம்மாவின் இறப்பு போஸ்டர் பார்க்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியப ஸ்டோர்ஸ்” சீரியலில், அம்மா இறந்தது தெரியாமல் கண்ணன் இருக்க குடும்பத்தில் இருப்பவர்கள் அம்மாவிற்கு தேவையான சடங்குகளை செய்கின்றனர். ஊர் மக்கள் உடலை எடுக்க வேண்டும் என சொல்ல, கண்ணன் வராமல் எடுக்க கூடாது என தனம் சொல்கிறார். மூர்த்தியும் என் தம்பி கண்ணன் வந்து அம்மாவின் முகத்தை பார்க்க வேண்டும். மருத்துவமனையில் கூட அவனை நான் பார்க்கவிடவில்லை என சொல்கிறார். ஆனால் இப்பவே மணி 6 ஆக போகிறது என ஊர் மக்கள் சொல்கின்றனர்.
கோவிலில் திருவிழா நடக்கிறது. இப்படியே போட்டு வைத்திருக்க முடியாது என ஊர்மக்கள் சொல்கின்றனர். கண்ணன் லோட் இறக்கி வைத்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார். ஊர் பெரியவர் சொன்னதால் ஜனார்தனனும் கண்ணனுக்கு பார்க்க கொடுத்துவைக்கவில்லை என சொல்லி தூக்க சொல்கிறார். சூடு காட்டில் சென்று காத்திருப்போம் அதற்குள் கண்ணன் வந்துவிடுவான் என சொல்கின்றனர். பின்னர் மூவரும் சேர்ந்து அம்மா உடலை தூக்கி செல்கின்றனர். தனம் மீனா முல்லை அம்மாவின் பின்னாடி அழுது கொண்டே வருகின்றனர்.
பின் ஐஸ்வர்யா கண்ணன் இன்னும் வரவில்லை என நினைத்து அழுது கொண்டே ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருக்க, கண்ணன் வந்து இறங்குகிறார். சூப்பர் மார்க்கெட் முடியிருப்பதை பார்த்து என்னாச்சு என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். பின் திரும்பி பார்க்க அம்மா இறந்துவிட்டார் என போஸ்டர் அடிக்கப்பட்டிருக்கு, அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அந்த போஸ்டர்களை கிழித்துவிடுகிறார். பின் ஐஸ்வர்யா அமர்ந்திருப்பதை பார்த்து என்ன ஐசு அம்மாவை பற்றி இப்படி போஸ்டர் அடித்திருக்கார்கள் என சொல்கிறார்.
ஜோடியாக வீடு திரும்பிய சந்தியா & சரவணன், ஏற்றுக் கொள்ளும் சிவகாமி – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!
எதோ தவறாக அடித்திருப்பார்கள் ஆனால் அண்ணன்கள் எப்படி இப்படி அடிக்கவிட்டார்கள் என சொல்கிறார். அம்மா எப்படி செத்து போவார்கள் என கண்ணன் புரியாமல் இருக்க, ஐஸ்வர்யா அத்தை செத்து போய்ட்டாங்க அம்மா உன்னால முகத்தை கூட கடைசியாக பார்க்க முடியவில்லை என சொல்கிறார். ஒரு பக்கம் சுடுகாட்டில் அனைத்து சடங்குகளும் நடைபெற்று விட்டது. ஐஸ்வர்யா அம்மாவை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுவிட்டனர். என கண்ணனிடம் சொல்ல என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணன் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.