போட்டிகளில் தன் திறமையை சிறப்பாக காட்டும் பாக்கியா, மகிழ்ச்சியில் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
போட்டிகளில் தன் திறமையை சிறப்பாக காட்டும் பாக்கியா, மகிழ்ச்சியில் இனியா - இன்றைய
போட்டிகளில் தன் திறமையை சிறப்பாக காட்டும் பாக்கியா, மகிழ்ச்சியில் இனியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!போட்டிகளில் தன் திறமையை சிறப்பாக காட்டும் பாக்கியா, மகிழ்ச்சியில் இனியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
போட்டிகளில் தன் திறமையை சிறப்பாக காட்டும் பாக்கியா, மகிழ்ச்சியில் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா அன்னையர் தின விழாவில் நடிகை ரேகா முன்னாள் பூ பூக்கும் ஓசை என்ற பாடலுக்கு நன்றாக நடனம் ஆடுகிறார். ஆனால் இனியா பாக்கியாவை தாழ்த்தி பேசிக் கொண்டே இருக்கிறார். இரண்டாவது சுற்று முடிந்து மூன்றாவது சுற்றிற்கு பாக்கியா செல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், நடிகை ரேகா சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். அவர் முன்னால் என்ன செய்ய போறீங்க என கேட்க நடனம் ஆட உள்ளதாக பாக்கியா பயத்துடன் சொல்கிறார். பின்னர் பாடல் தொடங்குகிறது. அதில் பூ பூக்கும் ஓசை பாடலுக்கு அருமையாக பாக்கியா நடனம் ஆடுகிறார். ஸ்கூல் டீச்சர், மட்டுமல்லாமல் இனியாவின் நண்பர்கள் கூட நன்றாக ஆடுவதாக சொல்கிறார். அதன் பின்னர் அனைவரும் பாக்கியாவிற்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் இனியா பாக்கியா சுமாராக தான் ஆடுகிறாய் என சொல்கிறார். அதன் பின்னர் இரண்டாவது சுற்றிற்கு தகுதியானவர்கள் பெயர் வாசிக்கப்படுகிறது. அதில் பாக்கியா பெயர் வருகிறது. இரண்டாவது சுற்று கேள்வி பதில் சுற்று நடத்தப்படுகிறது. அதில் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படுகிறது. அதை நினைத்து இனியா பயத்துடன் இருக்கிறார். இப்போது பாக்கியாவிடம் கேள்வி கேட்க படுகிறது. உங்களுக்கு இது போல கேள்வி கேட்போம் என தெரியுமா என சொல்கிறார்.

கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு வேலை தரும் ஜனார்த்தனன், பழைய நிலைக்கு திரும்பிய லட்சுமி அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

ஆனால் எனக்கு என்ன கேள்வி கேட்க இருப்பிங்க என எனக்கு தெரியும். ஆனால் எனக்கு தான் பதில் தெரியாது என சொல்கிறார். அதன் பின்னர் நீங்க என்ன வேலை பண்றீங்க என கேட்க நான் கேட்டரிங் செய்கிறேன். ஓ பிசினஸ் என ரேகா சொல்ல, நல்ல அம்மா எப்படி இருக்க வேண்டும் என கேட்கிறார். அதற்கு பாக்கியா நான் இதற்கு முன்னாள் ஸ்கூலிற்கு வரும் போது நான் எந்த வேலையும் செய்யவில்லை அதனால் என் மகள் என்னை அம்மா என்று சொல்ல கஷ்டப்படுவாள். இப்போது எனக்கு என ஒரு தொழில் இருக்கிறது.

என் வீட்டில் வேலை செய்யும் செல்வி காலையில் 4 மணிக்கு வேலைக்கு வருகிறார். தொடர்ந்து என் வீட்டில் வேலை செய்கிறார். அவள் குழந்தைகளுடன் அவளால் இருக்க முடியவில்லை. ஆனால் நான் என் பிள்ளைகளுடன் இருக்கிறேன் அப்போ அவள் நல்ல அம்மா இல்லை என்று சொல்ல முடியுமா. நமக்கு என்று தனி வேலை வேண்டும் அதோடு வீட்டில் இருக்கும் அனைவரின் தேவைகளை செய்ய வேண்டும். நான் பிசினஸ் தொடங்கிய பின் தான் என் மகள் என்னை தைரியமாக இருக்கிற அம்மா என நினைக்கிறார், நான் அப்படி தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என சொல்கிறார்.

அகிலை பிரிய மனமில்லாமல் கதறி அழும் அஞ்சலி, சொந்தக்காரர்கள் பற்றி கேட்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அதை கேட்டு அனைவரும் கை தட்டி வாழ்த்து தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்து அம்மா அவர்களது திறமையை காட்டுகின்றனர். பின்னர் இனியா பாக்கியாவை அழைத்து கை கொடுத்து சூப்பராக பேசினாய் என சொல்கிறார். இனியாவின் சந்தோசத்தை பார்த்து பாக்கியா சந்தோசப்படுகிறார். இங்கே எல்லாரும் வெற்றி பெற வேண்டும் என பதட்டத்தில் இருக்கின்றனர். நீ மட்டும் எப்படி சந்தோசமாக இருக்கிறாய் என கேட்க, நான் உனக்காக தான் இங்கே வந்தேன் நீ எனக்கு கை கொடுத்தது தான் எனக்கு கிடைத்த பரிசு என பாக்கியா சொல்கிறார்.

உடனே இனியா எனக்கு என்னமோ உனக்கு தான் பரிசு கிடைக்கும் என நினைக்கிறன் என சொல்கிறார். நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை சரி பார்ப்போம் என பாக்கியா சொல்கிறார். அப்போது நடுவர் ரேகா வந்து வெற்றி பெற்றவர்களை பற்றி சொல்ல வருகிறார். அனைவரும் நன்றாக செய்தீர்கள் எல்லாருக்கும் பரிசு தர வேண்டும் என நினைக்கிறன் ஆனால் அது முடியாதே என ரேகா சொல்ல. இனியா அம்மாவிற்கு எதாவது ஒரு பரிசு கிடைக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!