ராதிகாவுடன் பிக்னிக் செல்லும் இனியா, மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகாவுடன் பிக்னிக் செல்லும் இனியா, மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கும் கோபி - இன்றைய
ராதிகாவுடன் பிக்னிக் செல்லும் இனியா, மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகாவுடன் பிக்னிக் செல்லும் இனியா, மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா பிக்னிக் கிளம்ப கோபி எப்படியாவது சொல்லி பிக்னிக் செல்வதை தடுக்கிறார். பின் பாக்கியா ஜெனிக்கு போன் செய்து பேசுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா பிக்னிக் கிளம்ப பாக்கியா அவளுக்கு ஸ்னாக்ஸ் கொண்டு வந்து கொடுக்கிறார். உடனே இனியா இவ்வளவு வேண்டாம் என சொல்ல, பாட்டி போகும் போது அனைவருக்கும் பசிக்கும் அதனால் கொண்டு போ என சொல்கிறார். கோபி கிளம்பி வர இனியாவை கூட்டிக் கொண்டு போய் விட சொல்கிறார். ஆனால் கோபி பாக்கியாவை கொண்டு சென்று விட சொல்கிறார். பாக்கியா வண்டி இல்லை என சொல்ல, தாத்தா நான் கூட வருகிறேன் நீ கொண்டு போய் விடு என சொல்கிறார்.

மறுபக்கம் செழியன் ஜெனிக்கு போன் செய்ய அவர் எடுக்காமல் இருக்கிறார். உடனே செழியன் ஜெனிக்கு மெசேஜ் பண்ண அவர் அதை பார்த்துவிட்டு எடுக்காமல் இருக்கிறார். பின் பாக்கியா அங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்க செழியன் வந்து நீ ஏன் இவ்வளவு வேலை பார்க்கிறாய் என கேட்கிறார். செல்வி அக்கா பார்க்கமாட்டார்களா என கேட்க அவளுக்கு கொடுக்கிற காசை விட அதிகமாக தான் வேலை பார்க்கிறார் என சொல்கிறார்.

குழந்தையை பார்க்க வரும் குடும்பத்தினர், கயலை ஒதுக்குவதாக நினைக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் பாக்கியா ஜெனிக்கு போன் செய்ய ஜெனி எடுத்து பேசுகிறார். நீ எதையும் நினைத்து கவலைப்படாதே என பாக்கியா சொல்ல ஜெனி சரி என சொல்கிறார். அப்போது உன் அம்மா எங்கே என கேட்க அருகில் தான் இருக்காங்க என ஜெனி சொல்கிறார். ஆனால் ஜெனி அம்மா பேசாமல் இருக்க, ஜெனி ஆன்டி மீது ஏன் கோவமாக இருக்க அவர் என்ன செய்தார் நான் மாசமாக இருக்கும் போது என்னை எப்படி பார்த்துக் கொண்டார் தெரியுமா என சொல்கிறார்.

கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முயற்சி செய்யும் பாரதி, வெண்பாவை மிரட்டும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

கோபி இனியா மற்றும் அவரது அப்பாவை அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு வருகிறார். என்ன நடக்க போகுது என பதட்டத்தில் இருக்க, இனியா வீடு காட்டுகிறார். கோபி மயூ கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என பதட்டமாக இருக்கிறார். மயூ இனியா வருகிறாரா என வெளியே வந்து பார்க்க இனியா உள்ளே செல்கிறார். தாத்தாவும் சென்று இனியாவை விட்டுவிட்டு வருகிறார். உடனே கோபி வண்டியை திருப்பி நிற்க தாத்தாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!