பணம் கேட்டு வீட்டு வாசலில் சண்டை போடும் மக்கள், பாக்கியாவிற்கு பணம் தர முன்வரும் கோபி அப்பா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா உங்க அம்மா தான அவர்களுக்கு உதவி செய்யலாமே என ஜெனி செழியனிடம் கேட்கிறார். பின் பண மோசடி செய்யும் கும்பலை போலீசாரிடம் எழில் பிடித்துக் கொடுக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி செழியனிடம் ஆன்டி எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறார்கள். எழில் அவருக்கு உதவி செய்ய போய் இருக்கார். தாத்தாவும் உதவியாக இருக்கிறார். ஆனால் அங்கிள்யும் நீயும் ஏன் இப்படி இருக்கீங்க. ஆண்டிக்கு எதாவது உதவி செய்யலாமே என கேட்கிறார். அம்மா அப்படி தான் எதாவது செய்து மாட்டிக் கொள்வார் அதற்கு நான் என்ன செய்ய முடியும் என செழியன் சொல்லிவிட்டு முதலில் இந்த குழந்தை வேண்டுமா என முடிவு செய் என சொல்கிறார்.
மறுபக்கம் எழில் பண மோசடி கும்பல் இருக்கும் இடத்தை பார்த்துவிடுகிறார். பின் போலீசாரிடம் தகவல் சொல்லி பண மோசடி கும்பலை பிடிக்க வருகிறார். ஆனால் அவர்கள் தப்பித்து செல்ல, எழில் துரத்தி சென்று அவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுக்கின்றனர். மறுநாள் பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, ஈஸ்வரி என்ன நடக்க போகிறது என தெரியாமல் அழுகிறார். இனிமேல் பணம் கேட்டு எல்லாரும் வந்தால் உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிருவேன் என கோபி எச்சரிக்கை செய்கிறார்.
பணம் கேட்டு அனைத்து பெண்களும் வந்து நிற்க ஜெனி மற்றும் செல்வி பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கின்றனர். ஜெனி வயிற்றில் குழந்தை இருக்கிறது. அதனால் நீ அமைதியாக இருக்க வேண்டும் என பாட்டி சொல்கிறார். பாக்கியாவிடம் பணம் வாங்கியவர்கள் அனைவரும் வீட்டு வாசலில் வந்து சண்டை போடுகின்றனர். அப்போது கோபியை அவர் அப்பா எதுவும் பேசாதே என சொல்லி தடுக்கிறார். மறுபக்கம் எழில் போலீஸ் ஸ்டேஷனில் அனைவரையும் உட்கார வைக்கின்றனர்.
உடனே பணம் கிடைக்காது என போலீசார் சொல்ல, போலீசார் சிலரை அவங்க இடத்திற்கு அனுப்பிருக்கேன் அங்கே பணம் இருந்தால் பார்க்கலாம் என போலீசார் சொல்கின்றனர். பாக்கியாவிடம் பணம் வேண்டும் என அனைவரும் சண்டை போட, ஜெனி செழியனிடம் பணம் இருக்கிறதா என கேட்கிறார். அனைவரும் பணம் வேண்டும் என சொல்ல, வீட்டு ஆளுங்களை கூப்பிடுங்க நியாயத்தை கேட்போம் என அனைவரும் சொல்கின்றனர்.
ஹேமா தான் நீ பெற்ற பொண்ணு, உண்மையை கண்ணம்மாவிடம் சொன்ன சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
நிலைமை எல்லை மீறி போனதை தெரிந்த கோபி பாக்கியாவை அழைக்கிறார். இன்னும் கொஞ்ச நேரம் காத்திட்டு போலீஸ் ஸ்டேஷன் தான் போக போகிறார்கள் என கோபி சத்தம் போட, இன்னும் 5 நிமிடத்தில் வீட்டு வாசலில் இருந்து அனைவரும் கிளம்ப வேண்டும் என போலீஸ் பிரச்சனை எல்லாம் நீ மட்டும் தனியாக சமாளிக்க வேண்டும், சொல்வதை எல்லாம் கேட்காமல் செய்தாய் போய் கம்பி எண்ணு என சொல்கிறார். உடனே கோபி அப்பா உன்னை நான் அப்படியே விடமாட்டேன் பணம் தான வேண்டும் நான் தருகிறேன் என சொல்கிறார்.
உங்களிடம் பணம் ஏது என கேட்க நான் என்னுடைய பென்ஷன் பணத்தை கொடுக்க போகிறேன் என சொல்கிறார். யாரும் எதுவும் பேச கூடாது இது என் முடிவு என் பணம் என சொல்லி பாக்கியாவை அழைத்து செல்கிறார். பணம் கேட்டு வந்தவர்களிடம் பாக்கியா ஏமாற்றவில்லை, உங்க பணத்திற்கு நான் பொறுப்பு என் பென்ஷன் பணத்தை எடுத்து நான் தருகிறேன் என சொல்கிறார். நானும் பாக்கியாவும் பேங்க் தான் போகிறோம், ஒரு மணி நேரம் காத்திருங்க என சொல்லி பாக்கியாவை அழைத்து செல்கிறார்.
இருவரும் பேங்க் சென்று நீங்க கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எனக்காக கொடுக்கிறீங்க, எப்படியாவது அந்த பணத்தை நான் திருப்பி தந்திருவேன் என சொல்கிறார். உடனே பணம் எடுக்க சலான் கொடுக்க இந்த பேங்கில் அக்கவுன்ட் இல்லையே நீங்க பணம் எடுக்க வேண்டும் என்றால் உங்க ஊரில் தான் எடுக்க முடியும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.