ராதிகா பற்றி கோபியிடம் சொல்லும் பாக்கியா, போலீசில் புகார் கொடுத்த ராஜேஷ் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா வீட்டில் நடந்ததை எல்லாம் செல்வி பாக்கியாவிடம் சொல்ல, பின் கோபி ராதிகா பற்றி பாக்கியாவிடம் பேசுகிறார். மறுபக்கம் ராஜேஷ் மயூராவை ராதிகா கொடுமைப்படுத்துவதாக போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா வீட்டில் நடந்ததை பற்றி செல்வி சொல்ல ராதிகாவின் கணவர் மிகவும் மோசமானவராக இருக்கிறார் என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா வருத்தப்படுகிறார். கணவன் மனைவி பிரச்சனையில் அந்த குழந்தை மாட்டிக் கொண்டு இருக்கிறது என பாக்கியா சொல்கிறார். பின் ஈஸ்வரி அந்த பெண்ணை பார்த்தாலும் நல்ல பெண் மாதிரி தான் இருக்கிறது ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என கேட்க, அவங்களுக்கு இந்த வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என நினைத்தேன் ஆனால் அதுவும் இல்லாமல் போய்விடும் போல என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
அப்படி என்ன நடந்தது என கோபி கேட்க அவர் திருமணம் செய்ய இருப்பவர் சரியில்லையாம் அவருடைய குடும்பத்தை பற்றி ஏமாற்றி இருக்கிறார் என சொல்கிறார். வேற என்ன சொன்னார் என கேட்க அவ்வளவு தான் சொன்னார் என சொல்கிறார். ஈஸ்வரி நீ ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய் என கேட்க இல்லை தெரிந்தவர் என்பதால் கேட்கிறேன் என சொல்கிறார். ராதிகா சொல்வது எல்லாம் உண்மை தான் இப்பவே இப்படி சண்டை போடுகிறார் அப்போ அவருடைய முதல் வாழ்க்கை சரி இல்லாமல் தான் இருக்கும். அதனால் அவங்க இரண்டாவது திருமணம் செய்ய நினைத்தது சரி தான் என சொல்கிறார்.
நான் கடவுளிடம் அதான் வேண்டிக் கொள்கிறேன் என சொல்கிறார். ஆனால் பாக்கியா அடிக்கடி அவருடைய வீட்டிற்கு போகாதே என சொல்ல ஏன் இப்படி சொல்றீங்க என பாக்கியா கேட்கிறார். அப்போது ஈஸ்வரி அந்த பெண்ணிற்கு இவ்வளவு பிரச்சனை இருக்கிறது அதனால் வேண்டாம் என சொல்கிறார். பின் ராதிகா நடந்ததை எல்லாம் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க அப்போது ராதிகாவின் அம்மா கோபியை நீ திருமணம் செய்ய வேண்டும் என சொல்கிறார். ராதிகா நான் சொல்வது உங்களுக்கு புரியாது என சொல்கிறார்.
மூர்த்தி பார்க்க வந்த கதிர், வெளியே போக சொன்ன தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
அந்த டீச்சர் மிகவும் நல்லவர் என சொல்ல ஆனால் உனக்கும் கோபிக்கும் இருக்கும் உறவு பற்றி எல்லாருக்கும் தெரிந்துவிட்டது என சொல்கிறார். நான் அசிங்கபடுவேன் என்பதால் ஒரு அப்பாவி வாழ்க்கையை கெடுக்க முடியாது என சொல்கிறார். நல்லது சொன்னால் நீ கேட்கவே மாட்டாய் என ராதிகாவின் அம்மா சொல்கிறார். மறுபக்கம் ராஜேஷ் போலீஸ் ஸ்டேஷன் சென்று எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது ஆனால் என் மகளை பார்க்கவே விடாமல் இருக்கிறார். யார் யாரோ வீட்டிற்கு வருகிறார் அவருடன் என் பொண்ணை பழக விடுகிறார்.
இப்போது அவருடன் ரோட்டில் சண்டை போடுகிறார். அதை பார்த்து என் பொண்ணு கதறி அழுகிறாள். அதனால் என் பொண்ணை என்னிடம் ஒப்படைக்க உதவி செய்ய வேண்டும் என சொல்கிறார். பின் ராஜேஷ் புகார் எழுதி கொடுக்கிறார். கோபி தனது நண்பரிடம் எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என கேட்கிறார். ராதிகாவுக்கு என் மீது அன்பு இருக்கிறது என சொல்கிறார். ராதிகா வீட்டில் நடந்த சண்டையில் இருந்து நான் தப்பித்துவிட்டேன் என சொல்கிறார். நான் ராதிகா உடன் சேர வேண்டும் பாக்கியாவை விட வேண்டும் என கோபி சொல்கிறார்.
மறுபக்கம் ராதிகா வீட்டிற்கு போலீஸ் வருகின்றனர். அவர்கள் ராதிகா யார் என கேட்க நான் தான் என ராதிகா சொல்கிறார். உங்க கணவர் தான ராஜேஷ் என கேட்க ஆமாம் என சொல்கிறார். அவர் புகார் கொடுத்து இருக்கிறார் என சொல்ல ராதிகாவின் அம்மா நியாயமாக பார்த்தால் நாங்க தான் புகார் கொடுக்க வேண்டும் என சொல்கிறார். பின் போலீஸ் உங்க கணவர் உங்க பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லை எனவும் இந்த வீட்டிற்கு யாரோ வந்து செல்வதாகவும் புகார் கொடுத்து இருக்கிறார். இப்போது நீங்க வாங்க என சொல்ல ராதிகா நான் அப்பறம் வருகிறேன் என சொல்கிறார். எல்லாம் உன்னால் தான் என ராதிகாவின் அம்மா சொல்ல இந்த விஷயம் மயூராவிற்கு தெரிய கூடாது என சொல்கிறார். இதற்கெல்லாம் நான் முடிவு கட்டுகிறேன் என ராதிகாவின் அம்மா யாருக்கோ போன் செய்கிறார்.