பாக்கியாவிற்கு ஆறுதல் சொன்ன ராமமூர்த்தி, பாக்கியாவை நினைத்து கவலைப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவிற்கு ஆறுதல் சொன்ன ராமமூர்த்தி, பாக்கியாவை நினைத்து கவலைப்படும் ராதிகா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிற்கு ஆறுதல் சொன்ன ராமமூர்த்தி, பாக்கியாவை நினைத்து கவலைப்படும் ராதிகா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவிற்கு ஆறுதல் சொன்ன ராமமூர்த்தி, பாக்கியாவை நினைத்து கவலைப்படும் ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவின் முகம் சரி இல்லை என ராமமூர்த்தி கேட்க அப்போது கோபியை நினைத்து வருத்தப்படுவதாக செல்வி சொல்கிறார். பின் ராமமூர்த்தி எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். மறுபக்கம் பாக்கியாவை நினைத்து ராதிகா வருத்தப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா தாத்தாவிற்கு சாப்பாடு கொடுத்து கொண்டிருக்க அப்போது செல்வியிடம் தாத்தா பசங்க எப்படி இருக்கிறார்கள் என கேட்கிறார். அப்போது செல்வி என் கணவர் நன்றாக இருப்பதாக சொல்ல உடனே ராமமூர்த்தி பசங்களை கேட்டதாக சொல்கிறார். அப்போது பாக்கியா புருஷனை பிடிக்காது என சொல்லிவிட்டு அவரை பற்றி நினைப்பாக இருப்பதாக சொல்கிறார். அப்போது பாக்கியா முகம் சோகமாக இருப்பதாக கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என பாக்கியா சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

உடனே செல்வி சார் சில நாட்களாக சரியில்லை அதனால் தான் அக்கா சோகமாக இருப்பதாக சொல்ல உடனே தாத்தா நீ ஒன்றும் கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். பின் பாக்கியா காபியில் சீனி போடாமல் இருக்க ஈஸ்வரியும் ஜெனியும் என்ன ஆனது என கேட்கின்றனர். அப்போது ஜெனி இப்போதெல்லம் உங்களது முகமே சரியில்லை என சொல்கிறார். அங்கிளிற்கு பிரச்சனை இருந்து அவர் உங்களிடம் சொல்லி இருந்தால் நீங்க யோசிக்கலாம்.

ஆனால் அவர் சொல்லாத போது நீங்க இப்படி இருப்பது சரியில்லை என சொல்கிறார். நீங்க எப்போதும் இப்படி எல்லாம் இருக்க மாட்டீங்க எப்போதும் போல சிரித்துக் கொண்டே இல்லையே என சொல்ல பாக்கியா அப்படி எல்லாம் இல்லை என சொல்கிறார். உங்களுக்கு எவ்வளவோ பிரச்சனை வந்திருக்கிறது அதை எல்லாம் சுலபமாக பார்த்த நீங்க இப்போது ஏன் இப்படி இருக்கீங்க என ஜெனி கேட்கிறார். அங்கிளை நீங்க பார்த்துக் கொள்ள வேண்டும் அவருக்கு எதாவது பிரச்சனை என்றால் அவர் சொல்லி இருப்பார், சாதாரண அலுவலக வேலை தான் வேறு எதுவும் இருக்காது என ஜெனி சொல்கிறார்.

ஜெனி பேசியதை பார்த்து ஈஸ்வரி ஆச்சர்யப்படுகிறார். பின் பாக்கியா நான் பார்த்துக் கொள்கிறேன் என சொன்னாலும் அவருக்கு வருத்தமாக இருக்கிறது. மறுபக்கம் ராதிகா வக்கீலை சந்திக்க செல்கிறார். அப்போது வக்கீலிடம் விவாகரத்து பற்றி கேட்க இருவருக்கும் சம்மதம் என்பதால் சீக்கரம் கிடைத்துவிடும் என சொல்கிறார். பின் அவருடைய மனைவி எப்படி இருந்தார் என ராதிகா கேட்க அவருக்கும் இதில் வருத்தம் இல்லாதது போல இருப்பதாக சொல்கிறார்.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறப்பு! அமைச்சர் அறிவிப்பு!

உடனே குழப்பத்துடன் ராதிகா வீட்டிற்கு வருகிறார். மறுபக்கம் ராதிகாவிற்கு பாக்கியா போன் செய்கிறார்.அன்னைக்கு வருத்தமாக இருந்தீர்கள் இப்போது எப்படி இருக்கீங்க என கேட்க அப்போது ராதிகா எல்லாம் சரியாகிவிடும் என நம்பிக்கை இல்லை என சொல்கிறார். பின் பாக்கியா எல்லாம் சரியாகிவிடும் நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு ராதிகா வருத்தப்பட உங்களை போல என்னால் முடிவு செய்ய முடியவில்லை என சொல்கிறார். இப்போது நானும் உங்களை போன்ற நிலைமையில் தான் இருக்கிறேன் என ராதிகா சொல்கிறார்.

பின் ராதிகாவின் அம்மா வர ராதிகா போனை கட் செய்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா அந்த டீச்சரிடம் பேசுவதை நிறுத்து என சொல்ல ஆனால் நீங்க கோபிக்கு ஆதரவாக இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை என ராதிகா சொல்கிறார். அந்த டீச்சருடன் பேசுவதால் தான் நீ உன்னை பற்றி நினைக்காமல் இருக்கிறாய் என ராதிகாவின் அம்மா சொல்ல ராதிகா கிளம்பிவிடுகிறார். பின் மயூரா சோகமாக இருக்க என்ன ஆனது என ராதிகாவின் அம்மா கேட்கிறார். ராதிகாவும் என்ன ஆச்சு என கேட்க அப்போது ஏன் கோபி அங்கிள் உடன் பேசாமல் இருக்கீங்க அவர் சீக்கரம் நம்ம உடன் இருப்பார் என நீங்க சொன்னீங்க ஆனால் ஏன் இப்போது இப்படி என கேட்க ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!