தாத்தாவின் உடல்நிலை நினைத்து கவலைப்படும் குடும்பத்தினர் , தனது மகள் பற்றி ராதிகாவிடம் பேசும் கோபி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்திக்கு ரத்தகொதிப்பு அதிகமாக இருப்பதை பார்த்து பாக்கியாவும் ஈஸ்வரியும் மருத்துவமனைக்கு அழைக்கின்றனர். பின் கோபி என் மகளை அழைத்துக் கொண்டு வந்தால் பார்த்துக்கொள்வியா என ராதிகாவிடம் கேள்வி கேட்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், தாத்தா தலைவலியாக இருப்பதாக சொல்ல, பாக்கியா பிபி பார்க்கிறார். அப்போது 160 என காட்ட பாக்கியா மருத்துவமனைக்கு கூப்பிடுகிறார். ஆனால் தாத்தா சாயங்காலம் வரை பாப்போம் என சொல்கிறார். உடனே தாத்தாவை நினைத்து பாட்டியும் பாக்கியாவும் வருத்தப்படுகின்றனர். பின் கோபி ராதிகாவும் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்க, கோபி அடுத்த முறை வந்தால் மயூராவை அழைத்து கொண்டு வர வேண்டும் என சொல்கிறார். பின் உன் அம்மாவை கூட வர சொல்ல வேண்டும் என சொல்ல, ஏன் என ராதிகா கேட்கிறார்.
ராதிகா என்ன திடீரென கேட்குறீர்கள் என சொல்ல, அவருக்கு தான் என்னை பிடிக்கவே இல்லையே என கோபி சொல்கிறார். அதெல்லாம் இல்லை நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டால் அம்மா எதுவும் சொல்லமாட்டார் என சொல்கிறார். பின் உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என சொல்ல, எனக்கு என் குடும்பத்தை விட்டு வருவதில் பிரச்சனை இல்லை ஆனால் என்னுடன் என் மகள் வருவாள் அதை நீ ஏற்றுக் கொண்டு நீ என் மகளை பார்த்துக் கொள்வாயா என கேட்க ராதிகா சரி என சொல்கிறார்.
பின் அனைவரும் தாத்தா உடல்நிலை பற்றி பேச செழியன் மருத்துவமனைக்கு அழைக்கிறார். ஆனால் தாத்தா வேண்டாம் என சொல்லி நான் நன்றாக இருப்பதாக சொல்கிறார். தாத்தா பாட்டு பாடி எல்லாரையும் சந்தோசமாக வைக்க அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். பின் கோபி வர தாத்தாவிற்கு உடம்பு சரி இல்லை என ஈஸ்வரி சொல்கிறார். அதெல்லாம் அவர் சரியாகிவிடுவார் என நினைத்து கோபி எதுவும் பேசாமல் செல்கிறார்.
முல்லையிடம் பொய் சொல்லும் கதிர், உண்மையை மறைப்பதை நினைத்து வருத்தத்தில் கதிர் – இன்றைய எபிசோட்!
எழில் தாத்தாவிற்கு பிபி பார்க்க அது அப்போது கூட அதிகமாக இருக்கிறது. ஆனால் மருத்துவமனைக்கு வேண்டாம் என தாத்தா சொல்கிறார். பின் ஈஸ்வரி வந்து பேச எழில் நான் இங்கே தான் இருப்பேன் எதாவது ஒன்று என்றால் கூப்பிடுங்கள் என சொல்கிறார். பின் தாத்தா தூங்கி கொண்டிருக்கும் போது கோபி திருமணம் செய்ய இருப்பது பற்றி நினைத்து வருத்தப்படுகிறார். அவர் கோபியிடம் கேட்போம் என நினைத்து எழுந்து செல்கிறார்