ராதிகாவிற்கு தைரியம் சொல்லும் கோபி, கோபிக்கு அடிபட்டதால் பதறி போன குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
ராதிகாவிற்கு தைரியம் சொல்லும் கோபி, கோபிக்கு அடிபட்டதால் பதறி போன குடும்பத்தினர் - இன்றைய
ராதிகாவிற்கு தைரியம் சொல்லும் கோபி, கோபிக்கு அடிபட்டதால் பதறி போன குடும்பத்தினர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
ராதிகாவிற்கு தைரியம் சொல்லும் கோபி, கோபிக்கு அடிபட்டதால் பதறி போன குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவிற்கும் மயூராவிற்கும் நான் இருக்கிறேன் என கோபி கூறுகிறார். கோபிக்கு அடிபட்டதை பார்த்து குடும்பத்தில் உள்ளவர்கள் வருத்தப்படுகின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா, மயூராவை காரில் ஏறி உக்கார சொல்கிறார். அப்போது பாக்கியா போன் செய்கிறார். உடனே கோபி கீழே இறங்கி வந்து பாக்கியாவிடம் பேசுகிறார். ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டது அதனால் தான் நான் கூப்பிட போக முடியவில்லை என கோபி சொல்கிறார். நான் வேண்டுமானால் போய் கூட்டிக் கொண்டு வரவ என கேட்க, இல்லை நானும் ஜெனியும் சென்று ஆட்டோவில் கூட்டிக் கொண்டு வந்துவிட்டேன் என சொல்கிறார்.

அதன் பின்னர் ராதிகாவிடம் பயப்படாமல் இருக்க சொல்கிறார். நீங்க எதற்கு ஸ்கூலிற்கு வந்தீங்க என்று ராதிகா கேட்க, மயூராவை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை அதனால் தான் நான் ஸ்கூலிற்கு பார்க்க வந்தேன் என்று கோபி சொல்கிறார். இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு எதுவும் பிரச்சனை என்றால் மறக்காமல் என்னை கூப்பிடுங்க என்று சொல்கிறார். பின்னர் சட்டை எல்லாம் அழுக்காக இருக்க துடைத்துவிட்டு வீட்டிற்குள் வருகிறார்.

ஜனார்தனனிடம் கண்ணனுக்கு உதவி செய்ய கேட்கும் மீனா, உடம்பு சரி இல்லாமல் போன மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

ஏன் இனியாவை கூப்பிட செல்லவில்லை என அம்மா கேட்க ஒரு முக்கியமான வேலை அதான் நான் பாக்கியாவிற்கு போன் செய்து சொல்லிவிட்டேன் என்று சொல்கிறார். சட்டையில் உள்ள அழுக்கை பார்த்து பாக்கியா என்ன நடந்தது என்று கேட்கிறார். இனியாவை ஸ்கூலில் கூப்பிட சென்று கடையில் சாக்லேட் வாங்கலாம் என நடந்து சென்றேன் அப்போது, ஒரு வண்டி வேகமாக வந்து இடித்துவிட்டது என சொல்கிறார்.

லட்சுமியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதியை பார்க்க ஆசைப்படும் ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

உடனே வீட்டில் இருப்பவர்கள் அதை பார்த்து பதறி போய்விட்டனர். கோபிக்கு உடம்பெல்லாம் சிவந்து போனது, மாடிக்கு சென்று ரெஸ்ட் எடுக்க சொல்ல, இனியா நடந்ததை நினைத்து அழுகிறார். அதன் பின்னர் வீட்டில் இருப்பவர்கள் கோபியை பார்த்துக் கொள்ள பாக்கியாவின் கால் வலியை பார்க்காமல் சுடுதண்ணீர், ப்ளாக் டீ போட்டு கொடுக்கிறார். பாக்கியாவிற்கு காலில் சின்ன அடி தான் பட்டது அதற்கே அம்மா என்னை கூப்பிட்டார் என செழியன் சொல்ல பாக்கியாவிற்கு ஒரு மாதிரி ஆகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!