சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு – அய்யப்ப சேவா சமாஜம் கண்டனம்!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தெரிவித்துள்ளது.
சபரிமலை:
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மூடப்பட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு மாதாந்திர பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் இன்றி கோயில் ஊழியர்கள் முன்னிலையில் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் மாதாந்திர பூஜைகளுக்கு முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் பிரஜின், சரண்யா துராடி நடிப்பில் புது சீரியல் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
அந்த வகையில் தற்போது கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. மண்டல பூஜையானது டிசம்பர் 26ம் தேதி வரை நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோவையில் உள்ள எட்டிமடை அமிர்தா கல்லூரியில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், எரிமேலி யாத்திரைக்கு அதிக பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் ஈடு செய்யப்படும் – பள்ளிக் கல்வித்துறை தகவல்!
மேலும் பம்பையில் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும் கேரள சுகாதாரத்துறை சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இக்கட்டுப்பாடுகளை திருப்ப பெற வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் உள்ள பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் அறிவித்துள்ளது.