தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு விருதுகள் – மத்திய அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு விருதுகள் - மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு விருதுகள் – மத்திய அரசு அறிவிப்பு!

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய துறைகளுக்கு விருதுகள் வழங்கபட உள்ளது. மேலும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு விருதுகள்:

இந்தியாவில் ஆகஸ்ட் 15 ம் தேதி நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடைபெற வில்லை. தற்போது நோய் பரவல் குறைந்து வருவதால் இந்த ஆண்டு சுதந்திர தின விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவில் நாட்டில் சிறப்பாக பணியாற்றிய துறைகளில் உள்ள தகுதியானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய துறைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் காவல் துறையில் சிறப்பாக புலனாய்வு செய்து பணியாற்றுபவர்களுக்கு தேர்வு செய்து மத்திய அரசு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவல் துறையினருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த விருதுக்கு தமிழக காவல்துறையில் இருந்து 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுவையை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 709 மருத்துவமனைகள்? அமைச்சர் புதிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இதே போல் கூடுதல் பெண் சூப்பிரண்டு கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்து லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன் ஆகிய 5 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் வேறொரு நாளில் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு துறையில் சிறப்பாக பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த பெண் அதிகாரி உட்பட 5 பேருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!