தமிழகத்தில் ரயில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு.. அதிகரித்த நடைமேடை கட்டணம் – வலுக்கும் எதிர்ப்பு!

0
தமிழகத்தில் ரயில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு.. அதிகரித்த நடைமேடை கட்டணம் - வலுக்கும் எதிர்ப்பு!
தமிழகத்தில் ரயில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு.. அதிகரித்த நடைமேடை கட்டணம் - வலுக்கும் எதிர்ப்பு!
தமிழகத்தில் ரயில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு.. அதிகரித்த நடைமேடை கட்டணம் – வலுக்கும் எதிர்ப்பு!

தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் கடந்த 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நடைமேடை கட்டணம்

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். ரயில் பயணங்கள் பாதுகாப்பாகவும், சுலபமாகவும் இருப்பதால் மக்கள் பலர் அதையே விரும்புகின்றனர். மேலும் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் பயணம் எளிமையாக இருக்கிறது. அவ்வாறு ரயில்களில் பயணம் செய்ய வருபவர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் கூட்ட நெரிசல் இருக்கிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு நடைமேடை கட்டணத்தை உயர்த்தியது.

மேலும் நடைமேடை கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாநிலங்களில் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் மட்டுமே தினசரி 700ல் இருந்து 800 எண்ணிக்கையிலான நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக நடைமேடை டிக்கெட் ரூ. 5ல் இருந்து ரூ. 10 ஆக உயர்த்தப்பட்டது. கொரோனா காலத்தில் நடைமேடை கட்டணம் ரூ 50 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மீண்டும் 2,381 அரசு மழலையர் பள்ளிகள் திறப்பு – அரசின் அதிரடி அனுமதி!

Exams Daily Mobile App Download

கொரோனா தளர்வுகளுக்கு பின் நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ. 10 ஆக மாற்றப்பட்டது. தற்போது பண்டிகை காலம் என்பதால் சென்னை கோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட 8 முக்கிய ரயில் நிலையங்களில் கடந்த 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைமேடை கட்டணம் ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டது. அதனால் பயணிகள் சிரமத்தில் இருப்பதால் ரயில்வே நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!