ரயில் பயணிகள் கவனத்திற்கு – புதிய மாற்றம்! இதனை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!
இந்தியாவில் தொலைதூர பயணத்திற்கு ரயில் போக்குவரத்து மிகவும் உகந்ததாக உள்ளது. மேலும் IRCTC வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது இதில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டாயமான முறையில் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
பயணிகள் கவனத்திற்கு
இந்தியாவில் மற்ற பொது போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து குறைவான செலவு ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். மேலும் பயணிகள் தங்களின் இருப்பிடம், அலுவலகம், சுற்றுலா உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து ஆன்லைன் மூலமாகவே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான வசதியை இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் எனப்படும் IRCTC வழங்குகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் IRCTC வாயிலாக நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு இந்த இணையதளத்தில் உங்களுக்கென்று கணக்கை தொடங்க வேண்டும். இதில் ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அதாவது ஒரு மாதத்திற்கு 6 டிக்கெட் மட்டுமே IRCTC கணக்கை பயன்படுத்தி முன்பதிவு செய்ய இயலும். மேலும் கூடுதலாக டிக்கெட்களை புக்கிங் செய்ய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இந்த நடவடிக்கை ரயில்வே டிக்கெட் தரகர்களை குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் IRCTC கணக்கை தொடங்க நினைப்பவர்கள் தங்களின் ஆதார், பான் அல்லது பாஸ்போர்ட் எண்ணை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டியிருக்கும்.
TCS நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
இதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. அதனால் இதனை தடுக்க நடவடிக்கை ரயில்வே வாரியம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி இப்போது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பான், ஆதார் அல்லது தனிநபரின் அடையாள ஆவணங்களை இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது. இதற்காக IRCTC நிறுவனம் ஆதார் அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இனி டிக்கெட் புக்கிங் செய்வதில் சில மாற்றங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடினமானதாகவும் அதே சமயம் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.