தடுப்பூசி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு – மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு தமிழக அரசின் போதிய விழிப்புணர்வால் மாநிலத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தொற்று பரவலும் எதிர்பார்த்த அளவு குறைந்துள்ளது. மேலும் 100% தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் நோக்கில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
Jio vs Airtel vs Vi நிறுவனங்களின் விலை உயர்ந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!
இந்த நிலையில் மற்றொரு தாக்குதலாக கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 23 பேர் ஓமைகாரன் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து தடுப்பு பணியாக தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் நிலுவை – அமைச்சரிடம் கோரிக்கை!
குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதால் தமிழக அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் கோவில்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று விரைவில் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.