ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் நிலுவை – அமைச்சரிடம் கோரிக்கை!
காரைக்கால் பகுதியில் மருத்துவமனையில் தற்காலிகமாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக ஊதியம் நிலுவையில் இருந்து வருகிறது. அவ்வாறு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குமாறு ஒப்பந்த ஊழியர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊதியம் நிலுவை:
நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பல்வேறு பகுதிகளில் ஊதியம் நிலுவையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது காரைக்கால் அரசு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!!
இந்நிலையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லை என்று மக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இத்தகைய மருத்துவ ஊழியர் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபாநாயகர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா மற்றும் எம்.எல்.ஏ நாஜிம் ஆகியோர் அந்த மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் இடைநின்றவர்களுக்கான திறன் பயிற்சிகள் – டிச.15 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்போது அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது என்று சம்பந்தப்பட்ட ஊழியர்கள், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ நாஜிம் அவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்களது கோரிக்கை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏ நாஜிம் அவர்கள் ஒப்பந்தகாரர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் அளித்துவிட்டு பின்னர் அதற்கான நிதியை அரசிடம் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். அப்போது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆகியோருக்கு இடையில் சலசலப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.