TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – தேர்வுக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்களின் விவரம்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு நாளை (ஜூலை 24) நடைபெற இருக்கும் நிலையில் 7,031 பணியிடங்களை நிரப்புவதற்கு 22 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் எழுத இருக்கின்றனர்.
TNPSC குரூப் 4 தேர்வு:
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்கள், 316 தாலுகா மையங்களில் உள்ள 7689 தேர்வு மையங்களில் இந்த தேர்வானது நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 7,031 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் அதற்காக 22 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதில் ஆண்கள் 935354 பேரும், பெண்கள் 1267457 பேரும் தேர்வு எழுத இருக்கின்றனர். தேர்வுக்கு கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், காகித துண்டுகள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஹெட் போன்கள். மற்றும் ப்ளூடூத் கருவிகள், பேனா கேமிராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், சேமிப்பு கருவிகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை, தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
மேலும் தேர்வு மையங்களில் தேர்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, 7689 வீடியோகிராஃபர்கள், 7689 சிசிடிடி டெக்னீசியன்கள் மூலம் ஒட்டுமொத்த தேர்வும் ஒளிப்பதிவு செய்யப்பட இருக்கிறது. தேர்வு மையத்தினுள் 1,10,150 தேர்வு கண்காணிப்பாளர்களும், தேர்வை மேற்பார்வையிட பல்வேறு துறைகளில் இருந்தும் 7689 மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும், தேர்வு நடைபெறும் போது முறைகேடுகளில் ஈடுபட்டால் தேர்வு எழுத வாழ்நாள் தடைவிதிக்கப்படும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.