தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
கனமழை:
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அம்மாநில மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே கனமழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள முக்கிய ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது. குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
Exams Daily Mobile App Download
கடந்த 24 மணி நேரத்தில் திருவாடானையில் 9 செ மீ மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, முதுகுளத்தூர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தலா 7 செ மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று வெளியிட்ட அறிக்கையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது
அதனை தொடர்ந்து சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.