TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரம் இதோ!
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற TNPSC குரூப் 2, 2A ன் முதல் நிலைத்தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த தகவல்கள் வந்துள்ளது.
TNPSC குரூப் 2 & 2A தேர்வு:
தமிழகத்தில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை ஆகிய பணிகளுக்கான குரூப் 2,2A தேர்வு 2 வருடங்களுக்கு பிறகு 2022 மே 21ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 5529 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மேலும் விண்ணப்பித்ததில் 1.83 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!
இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு வினாக்கள் மிக எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவடைந்து 2 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை தேர்வின் முடிவுகள் வெளியாகவில்லை. இந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண் குறித்த கருத்து கணிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. பொதுப்பிரிவினர்களில் பெண்களுக்கு 158 மதிப்பெண்களும் ஆண்களுக்கு 161 மதிப்பெண்களும் கட் ஆப் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல SC/ST பிரிவில் பெண்களுக்கு 140 மதிப்பெண்களும், ஆண்களுக்கு 150 மதிப்பெண்கள் என கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த குரூப் 2 , 2A வின் முதல் நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்ற முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வை எழுத முடியும். இதிலும் தேர்ச்சி பெறுபவர்கள் தனிநபர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். பிறகு விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணம் உண்மையானதா இல்லையா என்பது சரிபார்க்கப்படும்.