TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி எப்போது? முக்கிய தகவல் இதோ!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பபதிவுகள் முடிவடைந்து ஒரு மாதத்திற்க்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை அதனால் விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
TET :
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் இத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 முறை டெட் தேர்வு தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2019-ம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் 95,000பேர் தேர்ச்சி பெற்று 25,000பேர் அரசு பணி பெற்றுள்ளனர். கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் டெட் தேர்வு நடைபெறவில்லை. பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.
சன் டிவியில் வரப்போகும் புதிய சீரியல் – பிரபல நடிகர் அறிமுகம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டி கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. மார்ச் 14 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் தால் இடைநிலை ஆசிரியர்களுக்கானது DTED கல்வி தகுதி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். மேலும் இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்கள் எழுத கூடிய தேர்வாகும். (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சுமார் 6 லட்சம் பேர் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்ப பதிவுகள் முடிந்து ஒன்றரை மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் தற்போது வரை தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். டெட் தேர்வை விரைந்து நடத்தினால் மட்டுமே, காத்திருக்கும் பட்டதாரிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வி ஆண்டிலேயே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர முடியும் என்று தெரிவித்து உள்ளனர். விரைவில் தேர்வு தேதி வெளியாகும் ஆவலுடன் விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.