திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளாஸ்டிக் தடை:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா தாக்கம் காரணமாக கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக ரூ.300 தரிசன டிக்கெட் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் ஆகஸ்ட் மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, தோல் உற்சவ போன்ற பூஜைகளில் கலந்து கொள்வதற்கான முன்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஷாம்பூ, தலைக்கு தடவ பயன்படும் எண்ணெய் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மட்கும் தன்மை அற்றவை. ஒரு முறை நாம் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் மண்ணின் தன்மையை பாதிக்கப்படுகிறது. அதனால் சுற்றுச்சூழலை பேணி காக்கும் நோக்குடன் திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
TNUSRB அரசு தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு..!
மேலும் திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் கண்ணாடி, செம்பு, எவர்சில்வர் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. குடிநீர் பாட்டில்களை தொடர்ந்து ஷாம்பூ, எண்ணெய் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் இனிமேல் திருப்பதி மலைக்கு எடுத்து செல்லக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எளிதில் மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் கவர்கள் அல்லது காகித பைகளை மட்டுமே பேக்கிங் செய்து கொடுக்க வேண்டும் என்று தேவஸ்தான கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.