தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – புதிய வருகை பதிவு செயலி அறிமுகம்!
தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் வருகை பதிவு செய்வதில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
வருகை பதிவு:
தமிழகத்தில் 2022 – 2023 ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது கொரோனா காலகட்டத்திற்கு முன்பு உள்ளது போல இயல்பாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கல்வித்துறையை டிஜிட்டல் மயமாகும் முறையில் அரசு பல செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய TNSED – school என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த செயலி மூலம் ஆசிரியர்கள் விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறையானது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எழுத்து பதிவேடு பதிவு முறையால் ஏற்படும் கால விரயத்தையும் சிரமத்தையும் தவிர்க்கும் வகையில் இத்தகைய முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல் அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்க TNSED-School செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் நாளை (ஆக. 2) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு
அதனை தொடர்ந்து பள்ளிகளில் கற்றல் பணிகள் சிறப்பாக இருக்க, தலைமை ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு வகுப்பிற்கு சென்று பாடம் கற்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் வட்டார கல்வி அதிகாரிகள் போன்றோர் பள்ளி ஆய்வு பணிகளை முக்கியமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் வருகையை வகுப்பு வாரியாக EMIS இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.