தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – நாளை(அக்.08) குறைதீர் முகாம்!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக அரசு மக்களுக்கு மலிவான விலையில் மளிகை பொருட்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டறியும் வண்ணம் குறைதீர் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக அரசு மளிகை பொருட்களை மானிய விலையில் விநியோகித்து வருகிறது. இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு ரேஷன் கடைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக ரேஷன் கடைகளில் செயல்பாட்டில் இருக்கும் பயோமெட்ரிக் முறை விரைவில் மாற்றபடவுள்ளதாக உணவு வழங்கல் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் கடைகளை சொந்த கட்டிடங்களில் மாற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது.
அதனை தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டறியும் பணியையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் அக்டோபர் மாதத்திற்கான குறைதீர் முகாம் நாளை (அக்.08) நடைபெறவுள்ளது. முகாமானது சென்னையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களிலும் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை குறைதீர் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி நாள்!!
Exams Daily Mobile App Download
இதில் கலந்து கொண்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் உங்களுக்கு உள்ள இடர்பாடுகளை தெரிவிக்கலாம். ஏதேனும் புகார்கள் இருந்தால் மனு அளிக்கலாம். இந்த முகாமில் புகார் அளிப்பதை தொடர்ந்து குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்து போன்ற பணிகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்