தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி நாள்!!
தமிழகத்தில் முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.
கல்வி உதவித்தொகை
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அவர்களின் மேற்படிப்பை தொடர வேண்டுமென தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் மத்திய அரசு சார்பாகவும் மாணவர்களின் கல்வி படிப்பிற்காக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னாள் படைவீரா்களின் குழந்தைகளுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவட்டத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வியில் முதலாம் ஆண்டு பயில்பவர்கள் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன் இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் முன்னாள் படைவீரா்களின் மகன், மகளாக இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என புதுதில்லி மைய முப்படைவீரா் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை வருகிற நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் பயனாளர்களுக்கு புதிய அப்டேட் – screenshot வசதி விரைவில் நீக்கம்? நிபுணர்கள் கணிப்பு!
Exams Daily Mobile App Download
அதனால் மாவட்டத்திலுள்ள தொழிற்கல்வியில் மகன், மகள் உள்ளிட்ட இருவரும் 2022-2023ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வியில் பயிலும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம். அத்துடன் 04567-230045 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்