Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!
இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுலவலகம் தற்போது ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் இந்த திட்டம் நாட்டு மக்களுக்கு பெரிதும் பயனாக இருக்கும் என்று அஞ்சல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் குறித்து முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ்:
போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்து இருப்பவர்கள் கவனத்திற்குக்காகவும், சேமிப்பு கணக்கை புதிதாக ஆரம்பிக்க உள்ளவர்கள் கட்டாயமாக இந்த தகவலை அறிந்து கொள்ளவும். வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை வழங்கி வரும் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று பிளான் வைத்து இருந்தால் அவர்களுக்கான ஒரு முக்கிய தகவல் கொண்ட தொகுப்பு தான் இது. சேமிப்பு கணக்கு இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த வங்கியில் மட்டும் தான் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பது இல்லை. கட்டாயமான முறையில் மக்கள் சேமிப்பு கணக்கை வைத்து உள்ளது அவர்களுக்கு பிற்காலத்தில் மிகவும் வசதியாக இருக்கும். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் தற்போது சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. இது குறித்து ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது 25 வயதான நபர்களுக்கு ஒரு முக்கிய பாலிசி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, 25 வயதான ஒருவர் 20 ஆண்டு பாலிசியை, ரூ7 லட்சம் உறுதி தொகையுடன் எடுத்திருந்தால், மாதத்திற்கு ரூ .2,853 பிரீமியம் செலுத்த வேண்டும். அதனை தொடர்ந்து, ஒரு நாளைக்கு ரூ. 95 செலுத்த வேண்டும் என்றும், அடுத்ததாக, காலாண்டு பிரீமியம் ரூ.8,449 ஆகவும், அரையாண்டு பிரீமியம் ரூ 16,715 ஆகவும், ஆண்டு பிரீமியம் ரூ .32,735 வரை இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே 9 வரை பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!
மேலும் அதனை தொடர்ந்து, 1000 ரூபாய்க்கு ஆண்டு போனஸ் ரூ 48 ஆகும். மேலும் ரூ .7 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகைக்கான ஆண்டு போனஸ் ரூ 33 ஆயிரத்து 600 ஆகும். இந்த போனஸ் தொகை மொத்த பாலிசி காலத்திற்கு வழங்கப்படும். அதன்படி, 20 ஆண்டு கால பாலிசிக்கு போனஸாக ரூ.6.72 லட்சம் வழங்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு இந்திய அஞ்சல் அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.