PM KISAN திட்ட விவசாயிகள் கவனத்திற்கு – E-KYC செயல்முறையை முடிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாள்!
PM KISAN திட்டத்தின் மூலமாக விவசாயிகள் நிதியுதவியை பெறுவதற்கு E-KYC செயல்முறையை கட்டாயமாக முடித்திருக்க வேண்டும். இந்நிலையில், தற்போது E-KYC செயல்முறையை முடிக்க ஆகஸ்ட் 31 வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
PM KISAN:
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் பலரும் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற்று பயனடைந்து வருகின்றனர். அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.2000 செலுத்தப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மட்டுமே ரூ.6000 வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரைக்கும் விவசாயிகள் 11 தவணைக்கான நிதியுதவியை பெற்றுள்ளனர். இந்நிலையில், தற்போது விவசாயிகள் 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே, செப்டம்பர் மாதத்தில் கண்டிப்பாக விவசாயிகளின் 12 ஆவது தவணை கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 12 ஆவது தவணை பெறுவதற்கான விதிமுறைகள் சில மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, PM திட்டத்துடன் கண்டிப்பாக ஆதார் எண்ணை இணைந்திருக்க வேண்டும். அப்படி விவசாயிகள் ஆதார் எண்ணை இணைந்திருந்தால் மட்டுமே 12 ஆவது தவணைக்கான நிதியுதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும், விவசாயிகள் கட்டாயமாக E-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும்.
Post Office சேமிப்பு திட்டங்களுக்கு வரி விலக்கு கிடைக்குமா? முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
மேலும், E-KYC செயல்முறையை முடிப்பதற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் இரண்டு விதமாக E-KYC செயல்முறையை அப்டேட் செய்யலாம். அதாவது, PM KISAN போர்ட்டலில் OTP அடிப்படையில் E-KYC செயல்முறையை அப்டேட் செய்யலாம் அல்லது அருகிலுள்ள SC மையங்கள் மூலமாக பயோமெட்ரிக் அடிப்படையிலும் E-KYC செயல்முறையை அப்டேட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்