சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை!
கொரோனா கால கட்டத்தில் சபரிமலைக்கு செல்ல கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் குறித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பக்தர்கள் கவனத்திற்கு
கொரோனா காலகட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக சபரி மலை கோவிலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்வதற்கான வசதியை கேரள அரசு அறிமுகப்படுத்தியது. இம்முறை கேரளா போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது. இதனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த மனு விசாரணையின் முடிவில், தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பக்தர்களின் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு செயல்பாடுகள் கொண்டு வரப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது தேவஸ்தானத்தின் கீழ் பக்தர்களுக்கு ஆன்லைன் முறையில் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக தேவஸ்தானமும் பக்தர்களுக்கு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது.
ஜூலை மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் மூடல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மேலும் தற்போது இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தாத இந்நிலையில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.