PF கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கும் EPFO நிறுவனம்!! இதை மட்டுமே பண்ணவே பண்ணிராதீங்க!!

0
PF கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு - எச்சரிக்கும் EPFO நிறுவனம்!! இதை மட்டுமே பண்ணவே பண்ணிராதீங்க!!
PF கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு - எச்சரிக்கும் EPFO நிறுவனம்!! இதை மட்டுமே பண்ணவே பண்ணிராதீங்க!!
PF கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கும் EPFO நிறுவனம்!! இதை மட்டுமே பண்ணவே பண்ணிராதீங்க!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய பலன்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தனது பயனாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை ஒன்றை EPFO நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பயனாளிகள் கவனத்திற்கு

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட பல வகையான பலன்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் நடைபெறுவதால் பல்வேறு வகையான மோசடிகள் நிகழ்கின்றது. மேலும் மோசடிகளை நிகழ்த்த தினந்தோறும் புதுப்புது யுக்திகளை மோசடி நிகழ்த்துபவர்கள் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆன்லைன் மோசடியாளர்கள் ஃபிஷிங் தாக்குதல் என்ற முறையில் புதிய வழியில் மோசடி செய்வதற்கான வழியை கண்டுபிடித்துள்ளனர்.

ஃபிஷிங்-யில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் PF தொடர்பான தகவல்கள் அனைத்தும் களவாடப்பட்டு அவரின் கணக்கு முடக்கப்படும். அதனால் நீங்கள் PF கணக்கு வைத்துள்ளவர் எனில் உங்களின் ஆதார், பான், UAN, வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது. மேலும் இது தொடர்பாக பிஎஃப் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதில் தெரிவித்துள்ளதாவது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது யுஏஎன், வங்கி கணக்கு, ஆதார், பான், OTP உள்ளிட்ட தனிநபரின் விவரங்களை கேட்பதில்லை என்று அறிவித்துள்ளது.

5ஜி பயனாளர்களுக்கு இணைய வசதி இந்த வேகத்தில் தான் கிடைக்கும்! நிபுணர்களின் ஷாக்கிங் தகவல்!

Exams Daily Mobile App Download

அதனால் PF கணக்குதாரர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை குறித்து தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. EPFO அமைப்பானது பயனாளிகளிடம் எந்தவொரு தொகையும் செலுத்துமாறு கேட்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மோசடியாளர்கள் ஃபிஷிங் தாக்குதல் மூலமாக நீங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்துள்ள பணத்தை மொத்தமாக திருடி விடுவார்கள். அதனால் ஃபிஷிங் அழைப்பு அல்லது செய்தி வந்தால் நீங்கள் உடனே காவல் துறைக்கு புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!