தமிழக மாணவர்களே உஷார்..இனி இதை செய்யாதீங்க! காவல்துறையின் எச்சரிக்கை!
தமிழகத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்து வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் இந்த நிலை மாறவில்லை. அதனால் சென்னையில் மாநகர போக்குவரத்து காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
படியில் பயணம்:
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்களது இருப்பிடத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். வழக்கமாக காலை நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பணிக்கு செல்வர். அதே போல மாணவர்கள் கல்வி நிலையத்திற்கு செல்வர். அதனால் எல்லா பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் கூட்டமான பேருந்துகளில் படியில் நின்று பயணிக்கின்றனர்.
இடமே இல்லாத பேருந்தில் கீழே விழுக போகும் நிலையில் மாணவர்கள் ஜன்னலின் கம்பிகள், பேருந்தின் கதவுகளை பிடித்து கொண்டு பயணம் செய்கின்றனர். இவ்வாறு மாணவர்கள் படியில் நின்று பயணிப்பதால் விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் பிற பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றனர். அதாவது மாணவர்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து படியில் நின்று கொண்டு கை நீட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
தமிழக பள்ளிகளில் காலாண்டு விடுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்? கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்!
Exams Daily Mobile App Download
இதுகுறித்து பலமுறை காவல்துறை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சில பேருந்துகளில் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்வதை நிறுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று சென்னையில் போக்குவரத்து காவலர்கள் பேருந்து நிறுத்தங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது படியில் நின்று பயணம் செய்த மாணவர்களை பிடித்து அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி , கல்லூரி முதல்வர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தவறு தொடர்ந்தால் அடுத்த முறை வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்