Airtel பயனர்கள் கவனத்திற்கு – இனி ரூ.99 ரீசார்ஜ் திட்டம் கிடையாது! கட்டணம் உயர்வு!
இந்தியாவின் பிரபல நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் தங்களது பயனர்களுக்கு உதவும் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது.
ரீசார்ஜ் திட்டம்:
அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த நிலையில் பிரபல நெட்வொர்க் நிறுவனங்கள் கடந்த வருடம் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை அதிகப்படுத்தியது. இதனால் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணம் உயர்ந்தது. இதனால் பயனர்கள் பொருளாதார ரீதியாக சிரமத்தை எதிர்கொண்டனர்.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – ஊரடங்கு அமல்! போராட்டத்தில் மக்கள்!
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்-கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி தற்போது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணம் 57% உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.99 லிருந்து ரூ.155 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டணம் ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் அமலில் உள்ளது குறிப்பிடதக்கது.
Follow our Instagram for more Latest Updates
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் இந்த ரூ.155 திட்டத்தில் வேலிடிட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. முதலில் 28 நாட்கள் வழங்கப்பட்ட வேலிடிட்டி 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 1 GB, டேட்டா மற்றும் 300 SMS வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. விரைவில் ஏர்டெல் தனது ரீசார்ஜ் திட்ட கட்டண உயர்வை விரைவில் இந்தியா முழுவதும் செயல்படுத்தும் என்று கூறப்படுகிறது.