தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு!
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்ததான புதிய குடும்ப அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் பணி, ஆய்வுப்பணி, அட்டைகளை அச்சிடும் பணிகள் மீண்டும் துவங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
குடும்ப அட்டை பணி
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜூலை 5 வரை முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் மக்கள் சந்தித்து வரும் நிதி நெருக்கடிகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இரண்டு தவணைகளாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
20 சதவீத மானியத்துடன் கடன் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதற்கிடையில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் பணிகள் மற்றும் இலவச மளிகை பொருட்களை வழங்கும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வந்ததால், புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. மேலும் இந்த புதிய மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் இப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஜூன் 29 முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – ஜூலை 1 முதல் புதிய கட்டுப்பாடுகள்!
மேலும் கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் களப்பணியாளர்களால் விசாரணைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தகுதியான மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பணிகளும் இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலை 1 முதல் புதிய குடும்ப அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் பணி மற்றும் குடும்ப அட்டை அச்சிடும் பணிகளை மேற்கொள்வதற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
New.reason card
புதிய குடும்ப அட்டை
குடும்ப அட்டை
எனக்கு ரேஷன் கார்டு வேணும் அது அரசாங்கம் வேண்டுகோள்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் அனிச்சம் பாளையம் மேல்பாதி போஸ்ட்
Eppa varum
Plss happy me